13 November 2013

விவாகரத்து வழக்கு இருக்கும்போதே மனைவி இன்னொரு திருமணம்

விவாகரத்து வழக்கு இருக்கும்போதே மனைவி இன்னொரு திருமணம்


சென்னை:  

         அயனாவரம் செல்லியம்மன் கோயில் 2வது தெருவை சேர்ந்தவர் சுதாகர் (35). இவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று ஒரு புகார் மனு அளித்தார். 

அதில், கூறப்பட்டிருப்பதாவது:

           2004ம் ஆண்டு எனக்கும் எனது அத்தை மகள் விஜயாவுக்கும் முறைப்படி திருமணம் நடந்தது. அனைத்து செலவுகளையும் நானே செய்தேன். திருமணத்திற்கு பிறகு மனைவி மற்றும் எனது பெற்றோருடன் வசித்து வந்தேன். குழந்தை இல்லை. கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஓராண்டாக நாங்கள் பிரிந்து வாழ்கிறோம். இந்நிலையில், விஜயா பொய்யான குற்றம் சாட்டி என்னிடம் விவாகரத்து கேட்டுள்ளார்.

அந்த வழக்கு குடும்ப நல நீதிமன்றத்தில் தற்போது நிலுவையில் உள்ளது. இந்நிலையில், என்னுடைய மனைவி விஜயாவிற்கும், கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த அன்பரசன் என்பவருக்கும் கடந்த அக்டோபர் 7ம் தேதி திருமணம் நடந்தது.அதை தடுக்க முயன்றும் முடியவில்லை. 

மாறாக எங்கள் மீது தாக்குதல் நடத்தினர். விவாகரத்து ஆவதற்கு முன்னர் எனது மனைவியை சட்ட விரோதமாக திருமணம் செய்த அன்பரசன் மற்றும் உடந்தையாக இருந்த எனது மனைவி விஜயா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top