தலைநகர் டெல்லியில் மீண்டும் ஒரு பாலியல் புகார்...
ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி மீது பெண் வழக்கறிஞர்
ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி மீது பெண் வழக்கறிஞர்
பாலியல் புகார்...
புதுடெல்லி:
அண்மையில் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவர் மீது இளம்பெண் வழக்கறிஞர் ஒருவர் பாலியல் புகார் கூறியுள்ளார்.
இதுகுறித்து விசாரணை நடத்த மூத்த நீதிபதிகள் அடங்கிய குழு ஒன்றை உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது. கொல்கத்தாவில் உள்ள தேசிய சட்ட அறிவியல் பல்கலை கழகத்தில் பயின்ற பெண் வழக்கறிஞர் ஒருவர் தமது படிப்பின் இறுதி காலத்தில் புகாருக்கு உள்ளான நீதிபதியிடம் பயிற்சிக்கு சென்றதாக கூறியுள்ளார்.
அந்த சமயத்தில் டெல்லியில் உள்ள ஓட்டல் ஒன்றில் தன்னை அவர் பாலியல் தொந்தரவு செய்ததாக நீதிபதி மீது வழக்கறிஞர் புகார் அளித்துள்ளார். டெல்லியில் ஓடும் பேருந்தில் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் வெடித்த கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே நீதிபதி தவறாக நடந்ததாக பெண் வழக்கறிஞர் கூறியுள்ளார்.
மேலும், 3 பெண்களிடம் அவர் தவறாக நடந்து கொண்டதாகவும் சட்டப் பத்தரிக்கைக்கு அளித்த பேட்டி ஒன்றில் அந்த பெண் வழக்கறிஞர் கூறியுள்ளார். இதன் அடிப்படையில் நீதிபதி மீதான பாலியல் புகாரை விசாரிக்க மூத்த நீதிபதிகள் 3 பேர் அடங்கிய குழு ஒன்றை தலைமை நீதிபதி சதாசிவம் அமைத்துள்ளார்.
மகாத்மா காந்தி தெரிவித்த சில வாக்கியங்களை சுட்டிக்காட்டியுள்ள அந்த பெண் வழக்கறிஞர் உயர் பதவி வகிக்கும் ஒருவர் மீது புகார் கொடுக்க விருப்பம் இல்லாமல் ஒதுங்கியிருந்ததாக தெரிவித்துள்ளார்.
தமது சமூக வலையதளத்தில் பெண் வழக்கறிஞர் ஒருவர் உச்சநீதிமன்ற நீதிபதி மீது கூறியுள்ள பாலியல் புகார் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த சமயத்தில் டெல்லியில் உள்ள ஓட்டல் ஒன்றில் தன்னை அவர் பாலியல் தொந்தரவு செய்ததாக நீதிபதி மீது வழக்கறிஞர் புகார் அளித்துள்ளார். டெல்லியில் ஓடும் பேருந்தில் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் வெடித்த கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே நீதிபதி தவறாக நடந்ததாக பெண் வழக்கறிஞர் கூறியுள்ளார்.
மேலும், 3 பெண்களிடம் அவர் தவறாக நடந்து கொண்டதாகவும் சட்டப் பத்தரிக்கைக்கு அளித்த பேட்டி ஒன்றில் அந்த பெண் வழக்கறிஞர் கூறியுள்ளார். இதன் அடிப்படையில் நீதிபதி மீதான பாலியல் புகாரை விசாரிக்க மூத்த நீதிபதிகள் 3 பேர் அடங்கிய குழு ஒன்றை தலைமை நீதிபதி சதாசிவம் அமைத்துள்ளார்.
மகாத்மா காந்தி தெரிவித்த சில வாக்கியங்களை சுட்டிக்காட்டியுள்ள அந்த பெண் வழக்கறிஞர் உயர் பதவி வகிக்கும் ஒருவர் மீது புகார் கொடுக்க விருப்பம் இல்லாமல் ஒதுங்கியிருந்ததாக தெரிவித்துள்ளார்.
தமது சமூக வலையதளத்தில் பெண் வழக்கறிஞர் ஒருவர் உச்சநீதிமன்ற நீதிபதி மீது கூறியுள்ள பாலியல் புகார் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
0 comments