பாட்னா குண்டு வெடிப்பு வழக்கு : முக்கிய குற்றவாளி தாரிக் உயிரிழப்பு
பாட்னாவில் கடந்த ஞாயிற்றுக் கிழமை நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி தாரிக் உயிரிழந்தான்.
பாட்னா ரயில் நிலையக் கழிவறையில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் சிக்கிய தாரிக் படுகாயமடைந்தான். படுகாயமடைந்த தாரிக் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தான். தொடர் சிகிச்சை பலனளிக்காமல் தாரிக் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளான்.
முன்னதாக கடந்த ஞாயிற்று கிழமையன்று பாட்னாவில் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பில் 6 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
0 comments