24 September 2013

இராமநாதபுரத்தில் ஓடும் பஸ்சில் ஜேப்படி மதுரை பெண் கைது

இராமநாதபுரத்தில் ஓடும் பஸ்சில் ஜேப்படி மதுரை பெண் கைது



 
இராமநாதபுரம், செப். 23:

                இராமநாதபுரம் அருகே உள்ள சிறுவயல் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டிமுருகன். இவரது மனைவி சந்தியா (வயது22). இவர் இராமநாதபுரம் சென்று விட்டு அங்கிருந்து ஊருக்கு பஸ்சில் புறப்பட்டார்.

அப்போது ஓடும் பஸ் சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி இவரது பையில் இருந்த மணிபர்சை ஒரு பெண் ஜேப்படி செய்துள்ளார். அவரை கையும், களவுமாக மற்ற பயணிகள் பிடித்து இராமநாதபுரம் போலீசில் ஒப்படைத்தனர்.

பஜார் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் கணேசலிங்கபாண்டியன் அந்த பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தினார். இதில் அவரது பெயர் சரண்யா (23) என்பதும், மதுரை வண்டியூர் காலனியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top