நிலத்தகராறு காரணமா? 5 பேர் கும்பலால் வெட்டப்பட்ட
ஓய்வு பெற்ற டாக்டர் மரணம்
சென்னை :
துரைப்பாக்கம் குமரன் குடில் பகுதியை சேர்ந்தவர் டாக்டர் சுப்பையா (58). சென்னை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நரம்பியல் மருத்துவராக பணிபுரிந்து வந்தார். சில மாதங்களுக்கு முன் ஓய்வு பெற்றார். பின்னர் அபிராமிபுரத்தில் உள்ள பில்ரோத் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார்.
கடந்த 14ம் தேதி அபிராமிபுரம் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு புறப்படுவதற்காக காரில் ஏறினார். அப்போது, அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் டாக்டர் சுப்பையாவை சரமாரியாக அரிவாளால் வெட்டி சாய்த்தது. 27 வெட்டுகளுடன் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் நேற்று முன்தினம் நள்ளிரவு உயிர் இழந்தார்.
மயிலாப்பூர் துணை கமிஷனர் லட்சுமி உத்தரவுப்படி, கோட்டூர்புரம் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினார். டாக்டர் சுப்பையாவின் சொந்த ஊர் குமரி மாவட்டம் சாமித்தோப்பு. இவருக்கு அஞ்சுகிராமம் என்ற ஊரில் ஒரு நிலம் இருந்தது. இது தொடர்பாக டாக்டருக்கும் அதே ஊரை சேர்ந்த ஆசிரியர் பொன்னுசாமி குடும்பத்துக்கும் 1958 முதல் தகராறு இருந்துள்ளது. இதில் டாக்டருக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், டாக்டர் சுப்பையா கொலை செய்யப்பட்டது தொடர்பாக அவரது மனைவியின் சகோதரர் மோகன் போலீசில் புகார் செய்தார். அதில் ஆசிரியர் பொன்னுசாமி, அவரது தாய் அன்னபழம், மனைவி மேரி புஷ்பா, மகன் வக்கீல் பைசில், இவர்களின் உறவினரான வக்கீல் வில்லியம் ஆகியோர் தூண்டுதலில் தாக்குதல் நடந்திருக்கலாம் என்று கூறி இருந்தார்.
இதையடுத்து, உயர் நீதிமன்றத்தில் இருந்த வக்கீல் வில்லியம்ஸ், பைசில் ஆகியோரை கைது செய்வதற்காக எஸ்ஐ சங்கர நாராயணன் சென்றார். அப்போது நடந்த மோதலில் வக்கீல்களை கடத்த முயன்றதாக எஸ்ஐ சங்கர நாராயணன் மீது புகார் கூறப்பட்டது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். நெஞ்சுவலி காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர், பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். வக்கீல்கள், எஸ்ஐ மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது.
டாக்டர் சுப்பையா சென்னையில் பணிபுரியும் உயர் போலீஸ் அதிகாரியின் உறவினர். இவருக்கு ஆனந்தி என்ற மனைவியும், சுவேதா, ஷிவானி என்ற 2 மகள்களும் உள்ளனர். இவர்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. டாக்டரை வெட்டிவிட்டு தப்பியது யார். 5 பேர் கும்பல் கூலிப்படையா, அவர்களை ஏவியது யார் என தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
கடந்த 14ம் தேதி அபிராமிபுரம் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு புறப்படுவதற்காக காரில் ஏறினார். அப்போது, அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் டாக்டர் சுப்பையாவை சரமாரியாக அரிவாளால் வெட்டி சாய்த்தது. 27 வெட்டுகளுடன் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் நேற்று முன்தினம் நள்ளிரவு உயிர் இழந்தார்.
மயிலாப்பூர் துணை கமிஷனர் லட்சுமி உத்தரவுப்படி, கோட்டூர்புரம் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினார். டாக்டர் சுப்பையாவின் சொந்த ஊர் குமரி மாவட்டம் சாமித்தோப்பு. இவருக்கு அஞ்சுகிராமம் என்ற ஊரில் ஒரு நிலம் இருந்தது. இது தொடர்பாக டாக்டருக்கும் அதே ஊரை சேர்ந்த ஆசிரியர் பொன்னுசாமி குடும்பத்துக்கும் 1958 முதல் தகராறு இருந்துள்ளது. இதில் டாக்டருக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், டாக்டர் சுப்பையா கொலை செய்யப்பட்டது தொடர்பாக அவரது மனைவியின் சகோதரர் மோகன் போலீசில் புகார் செய்தார். அதில் ஆசிரியர் பொன்னுசாமி, அவரது தாய் அன்னபழம், மனைவி மேரி புஷ்பா, மகன் வக்கீல் பைசில், இவர்களின் உறவினரான வக்கீல் வில்லியம் ஆகியோர் தூண்டுதலில் தாக்குதல் நடந்திருக்கலாம் என்று கூறி இருந்தார்.
இதையடுத்து, உயர் நீதிமன்றத்தில் இருந்த வக்கீல் வில்லியம்ஸ், பைசில் ஆகியோரை கைது செய்வதற்காக எஸ்ஐ சங்கர நாராயணன் சென்றார். அப்போது நடந்த மோதலில் வக்கீல்களை கடத்த முயன்றதாக எஸ்ஐ சங்கர நாராயணன் மீது புகார் கூறப்பட்டது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். நெஞ்சுவலி காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர், பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். வக்கீல்கள், எஸ்ஐ மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது.
டாக்டர் சுப்பையா சென்னையில் பணிபுரியும் உயர் போலீஸ் அதிகாரியின் உறவினர். இவருக்கு ஆனந்தி என்ற மனைவியும், சுவேதா, ஷிவானி என்ற 2 மகள்களும் உள்ளனர். இவர்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. டாக்டரை வெட்டிவிட்டு தப்பியது யார். 5 பேர் கும்பல் கூலிப்படையா, அவர்களை ஏவியது யார் என தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
0 comments