24 September 2013

மத்திய, மாநில அரசுகளின் சலுகைகளை பெற ஆதார் அட்டை கட்டாயம் இல்லை

மத்திய, மாநில அரசுகளின் சலுகைகளை பெற 
ஆதார் அட்டை கட்டாயம் இல்லை


புதுடெல்லி: 

                 ஆதார் அட்டை பெறுவது மக்களுக்கு கட்டாயமாக்கப்படவில்லை என்றும் விருப்பப்பட்டால் பெற் றுக் கொள்ளலாம் என்றும் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனால், அரசின் மானியங்களை பெறுவதற்கு ஆதார் அட்டை அவசியம் இல்லை. அரசின் பல்வேறு சேவைகளுக்கு ஆதார் அட்டை கட்டாயம் என்று சில மாநில அரசுகள் கூறுகின்றன. உதாரணமாக, மகாராஷ்டிராவில் திருமணத்தை பதிவு செய்ய ஆதார் அட்டை கட்டாயம் என்று அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், மும்பை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகளும் மற்ற ஊழியர்களும் தங்கள் சம்பளத்தை பெறுவதற்கு ஆதார் அட்டை வைத்திருக்க வேண்டியது அவசியம் என்று நீதிமன்ற பதிவாளர் உத்தரவிட் டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சொத்து தொடர்பான பத்திர பதிவுகளுக்கும் ஆதார் அட்டை வேண்டும் என்று சில மாநில அரசுகள் வலியுறுத்துகின்றன.

இதை எதிர்த்தும் சட்ட விரோதமாக இந்தியாவில் குடியேறியவர்களுக்கு ஆதார் அட்டைகள் வழங்கப்படுவதை எதிர்த்தும் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன.
கர்நாடக உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.எஸ். புட்டசுவாமி, தாக்கல் செய்த மனுவில், ‘‘ஆதார் அட்டை கட்டாயம் இல்லை என்று மத்திய அரசு முதலில் கூறியது.

ஆனால், சில மாநிலங்களில் ஆதார் அட்டை கட்டாயம் என்று இப்போது சொல்வது தவறு. திருமணத்தை பதிவு செய்ய ஆதார் அட்டை தேவை என்று மகாராஷ்டிரா அரசு கட்டாயப்படுத்துகி றது. ஆதார் அட்டையை கட்டாயமாக திணிப்பது மக்களின் அடிப்படை உரிமைக்கும் சுதந்திரத்துக்கும் எதிரானது. எனவே, இந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்’’ என்று கோரியிருந்தார்.

இந்த மனுக்களை நீதிபதிகள் பி.எஸ்.சவுகான், எஸ்.ஏ.பாப்டே ஆகியோர் கொண்ட பெஞ்ச் நேற்று விசாரித்தது. மத்திய அரசின் சார்பில் ஆஜரான வக்கீல் அளித்த பதிலில், ‘‘மத்திய அரசை பொறுத்தவரை ஆதார் அட்டையை பெறுவது குடிமக்களுக்கு கட்டாயமில்லை. விருப்பப்பட்டவர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்றுதான் அரசு கூறுகிறது’’ என்றார்.
பின்னர், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘‘ஆதார் அட்டை விருப்பப்படுபவர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும்.

அதை கட்டாயப்படுத்த கூடாது. வெளிநாட்டில் இருந்து சட்ட விரோதமாக குடியே றியவர்களுக்கு ஆதார் அட்டையை வழங்க கூடாது. அப்படி வழங்கினால், அது அவர்கள் இந்தியாவில் தங்கியிருப்பதை சட்டபூர்வமாக ஆக்கிவிடும்’’ என்று தெரிவித்தனர். ஆதார் அட்டையை பெறுவது கட்டாயம் இல்லை என்று அரசு கூறியிருப்பதால், காஸ் மானியம் போன்ற அரசின் மானியங்களை பெறுவதற்கு ஆதார் அட்டை அவசியம் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

* ஆதார் அட்டை திட்டத்துக்காக மத்திய அரசு ஸி50 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
* செப்டம்பர் 16ம் தேதி வரை நாட்டின் பல மாநிலங்களிலும் 42.5 கோடி பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது.
* தமிழகத்தில் கடந்த ஆண்டு நவம்பர் முதல் இந்த ஆண்டு ஏப்ரல் வரை புகைப்படம் எடுத்தவர்களுக்கு ஆதார் அட்டை இன்னும் கிடைக்கவில்லை.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top