பள்ளி, கல்லூரி காலங்களில் இரண்டு பேரை காதலித்தேன்
அமலா பால் பேட்டி
நடிகை அமலாபால் ஐதராபாத்தில் அளித்த பேட்டி வருமாறு:–
அனகா என்ற பெயரில் சினிமாவில் அறிமுகமானேன். அந்த பெயரை வைத்து அழைக்க கஷ்டமாக உள்ளது என்றனர். அதன் பிறகு அமலாபால் என மாற்றினேன். அது ராசியாக அமைந்தது. நிறைய பட வாய்ப்புகள் வந்தன.
பள்ளியில் படித்தபோது ஒரு பையனை பிடித்தது. அது காதலா? என்று புரியவில்லை. அவனை அடிக்கடி பார்க்க வேண்டும், பேச வேண்டும் என்று ஆசைப்பட்டேன். கொஞ்ச நாள்தான் அந்த ஈர்ப்பு இருந்தது. கல்லூரிக்கு போனதும் இன்னொருவன் மேல் காதல் வந்தது. அறிவு முதிர்ச்சி இல்லாததால் அது காதலா? கவர்ச்சியா? என்று உணர முடியவில்லை. இப்போது அந்த காதலும் போய் விட்டது.
எனக்கு கணவராக வருபவர் எல்லோருக்கும் உதவுபவராக இருக்க வேண்டும். அடுத்தவர் கஷ்டங்களையும் புரிந்து கொள்ள வேண்டும்.
நான் படித்த குடும்பத்தில் இருந்து வந்தவள். நிறைய படிக்க வைக்க பெற்றோர் விரும்பினர். ஜாலியாக மாடலிங் பண்ணப் போய் மலையாள டைரக்டர் கண்ணில்பட்டு நடிகையாகி விட்டேன். நான் நடித்த முதல் மலையாள படத்தை பார்க்க தியேட்டருக்கு போனேன். என்னையும் சேர்த்து ஐந்து பேர்தான் இருந்தோம். கதையை தேர்வு செய்து நடிப்பது முக்கியம் என்று அப்போது புரிந்து கொண்டேன். ‘மைனா’ படம் பெரிய திருப்பு முனை ஏற்படுத்தியது.
தமிழில் சர்ச்சைக்குரிய கதையம்சம் உள்ள படமொன்றில் நடித்தேன். அந்த படத்துக்காக என்னை ஆபாசமாக சித்தரித்து போஸ்டர் ஓட்டினர். அதை பார்த்து வருத்தப்பட்டேன். சினிமாவில் பணம்தான் முக்கியமாக உள்ளது.
இவ்வாறு அமலாபால் கூறினார்.
0 comments