தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியில் இருந்து
விஜயசாந்தி அதிரடி சஸ்பெண்ட்
திருப்பதி:
நடிகை விஜயசாந்தி டிஆர்எஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஆந்திர மாநிலம் மெதக் தொகுதி எம்பியும், நடிகையுமான விஜயசாந்தி, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியில் செயற்குழு உறுப்பினராக இருந்தார். அக்கட்சி சார்பில் தெலுங்கானா தனி மாநிலம் கேட்டு நடத்தப்பட்ட பல்வேறு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றார்.
தனி தெலுங்கானாவுக்காக டிஆர்எஸ் கட்சித்தலைவர் சந்திரசேகரராவுடன் சேர்ந்து டெல்லியிலும் பல போராட்டங்களில் ஈடுபட்டார்.
இந்நிலையில், விஜயசாந்தி கடந்த சில தினங்களாக டிஆர்எஸ் கட்சி சார்பில் நடந்த எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் ஒதுங்கி இருந்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன் மத்திய அரசு தனி தெலுங்கானா குறித்து அறிவித்தபோது டிஆர்எஸ் கட்சி சார்பில் நடந்த வெற்றி விழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவில்லை.
இதுதவிர விஜயசாந்தி வீட்டின் அருகே முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிலரின் புகைப்படங்களுடன் ஏற்பாடு செய்த பிளக்ஸ் போர்டுகள், கட் அவுட்கள் கடந்த சில நாட்களாக காணப்படுகிறது.
இதனால் காங்கிரஸ் கட்சியில் விஜயசாந்தி சேரப்போவதாக தகவல்கள் வெளியானது. இதுதொடர்பாக, விஜயசாந்தியின் நண்பர்கள் மற்றும் சில உறவினர்கள் கூறுகையில், டிஆர்எஸ் கட்சியில் விஜயசாந்தி சேர்ந்தபோது கட்சியின் தலைவர் சந்திரசேகரராவுக்கு அடுத்தபடியாக 2வது இடத்தில் இருந்தார். ஆனால் கடந்த சில மாதங்களாக கட்சி சார்பிலும், தெலுங்கானா தனிமாநிலத்திற்கான நிகழ்ச்சிகளிலும் சந்திரசேகரராவுடன் அவர் சேர்ந்து சென்றபோது அவரை மேடைக்கு அழைப்பதில்லை.
மேடையில் பேசும்போது அவரது பெயரையும் கூறுவதில்லை. இதனால் அதிருப்தி அடைந்த அவர் கட்சியில் இருந்து ஒதுங்கி இருந்தார் என்றனர். மேலும் டிஆர்எஸ் கட்சித்தலைவர் சந்திரசேகரராவ், கடந்த சில தினங்களுக்கு முன் மெதக் நாடாளுமன்ற தேர்தலில் தான் போட்டியிட உள்ளதாகவும், செகந்திராபாத் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுமாறும் விஜயசாந்தியிடம் கூறியுள்ளார்.
இதனால் அதிருப்தி அடைந்த விஜயசாந்தி கட்சியில் இருந்து ஒதுங்கி இருந்தார். இதுதவிர தெலுங்கானா தனி மாநிலமாக அறிவிக்க காங்கிரஸ் கூட்டணி முடிவு எடுத்தபோது டெல்லியில் இருந்த விஜயசாந்தி, மூத்த காங்கிரஸ் கட்சி தலைவர்களை சந்தித்து பேசியிருக்கிறார்.
இதனால் காங்கிரஸ் கட்சியில் விஜயசாந்தி சேரப்போவதாக தகவல்கள் வெளியானது. இதுதொடர்பாக, விஜயசாந்தியின் நண்பர்கள் மற்றும் சில உறவினர்கள் கூறுகையில், டிஆர்எஸ் கட்சியில் விஜயசாந்தி சேர்ந்தபோது கட்சியின் தலைவர் சந்திரசேகரராவுக்கு அடுத்தபடியாக 2வது இடத்தில் இருந்தார். ஆனால் கடந்த சில மாதங்களாக கட்சி சார்பிலும், தெலுங்கானா தனிமாநிலத்திற்கான நிகழ்ச்சிகளிலும் சந்திரசேகரராவுடன் அவர் சேர்ந்து சென்றபோது அவரை மேடைக்கு அழைப்பதில்லை.
மேடையில் பேசும்போது அவரது பெயரையும் கூறுவதில்லை. இதனால் அதிருப்தி அடைந்த அவர் கட்சியில் இருந்து ஒதுங்கி இருந்தார் என்றனர். மேலும் டிஆர்எஸ் கட்சித்தலைவர் சந்திரசேகரராவ், கடந்த சில தினங்களுக்கு முன் மெதக் நாடாளுமன்ற தேர்தலில் தான் போட்டியிட உள்ளதாகவும், செகந்திராபாத் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுமாறும் விஜயசாந்தியிடம் கூறியுள்ளார்.
இதனால் அதிருப்தி அடைந்த விஜயசாந்தி கட்சியில் இருந்து ஒதுங்கி இருந்தார். இதுதவிர தெலுங்கானா தனி மாநிலமாக அறிவிக்க காங்கிரஸ் கூட்டணி முடிவு எடுத்தபோது டெல்லியில் இருந்த விஜயசாந்தி, மூத்த காங்கிரஸ் கட்சி தலைவர்களை சந்தித்து பேசியிருக்கிறார்.
இதைத் தொடர்ந்து, நேற்று மாலை டிஆர்எஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் கூடி, விஜயசாந்தியின் நடவடிக்கை பற்றி ஆலோசிக்கப்பட்டது. இதன்பின், அக்கட்சியின் தலைவர் சந்திரசேகரராவ், கட்சியில் இருந்து விஜயசாந்தியை சஸ்பெண்ட் செய்து நேற்று நள்ளிரவில் அறிவித்தார்.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட விஜயசாந்தி, தன்னுடைய அரசியல் பயணத்தை பாஜகவில் துவக்கினார். இதனால் அவர் மீண்டும் பாஜகவில் சேருவார் என எதிர்பார்க்கப்பட்டது.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட விஜயசாந்தி, தன்னுடைய அரசியல் பயணத்தை பாஜகவில் துவக்கினார். இதனால் அவர் மீண்டும் பாஜகவில் சேருவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அவர் தற்போது காங்கிரஸ் கட்சியில் சேர ஆர்வம் கொண்டு அக்கட்சி தலைவர்களை சந்தித்து பேசி வருவது குறிப்பிடத்தக்கது.
0 comments