10 June 2013

அதிக பணிச்சுமையால் திண்டாடும் கேணிக்கரை போலீஸ் நிலையம் கூடுதல் இன்ஸ்பெக்டர் நியமிக்க வலியுறுத்தல்

அதிக பணிச்சுமையால் திண்டாடும் 

கேணிக்கரை போலீஸ் நிலையம் 

கூடுதல் இன்ஸ்பெக்டர் நியமிக்க வலியுறுத்தல்



ராமநாதபுரம்:

ராமநாதபுரம் கேணிக் கரை போலீஸ் நிலையத் தின் எல்லை வரையறை அதிகமாக இருப்பதால் போலீசார் பணிச்சுமை யால் திண்டாடி வருகின் றனர்.

அதிக எல்லைப்பரப்பு

மாவட்ட தலைநகரான ராமநாதபுரத்தில் கேணிக் கரை, பஜார், நகர் ஆகிய போலீஸ் நிலையங்களும், மக ளிர் மற்றும் போக்குவரத்து காவல் நிலையங்களும் செயல் பட்டு வருகின்றன. ராமநாத புரம் போலீஸ் துணை சூப்பி ரண்டு அலுவலக கட்டுப்பாட் டில் உள்ள இந்த போலீஸ் நிலையங்கள் மூலம் நகரில் சட்டம் ஒழுங்கு, பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. இதில் கேணிக் கரை போலீஸ் நிலையம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ராமநாதபுரம் கேணிக்கரை பகுதியில் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது.

ஆயுதங்கள் பாதுகாப்பு வசதி, கைதிகள் தங்கும் அறை உள்ளிட்ட பல்வேறு அடிப் படை காரணங்களுக்காக இந்த போலீஸ் நிலையம் ராம நாதபுரம் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான கட்டிடத்திற்கு மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது. ராம நாதபுரத்திலேயே அதிக பரப் பளவு எல் லையை கொண்ட போலீஸ் நிலையமாக திகழ்ந்து வருகிறது. தற்போது ராமநா தபுரம் நகரில் ஏற்கனவே இருந்த கேணிக்கரை காவல் நிலைய எல்லைப்பகுதி விரி வாக்கம் செய்யப்பட்ட பகுதி களில் நாளுக்கு நாள் குடியிருப் புகளின் எண்ணிக்கை அதி கரித்து வருவதாலும், புதிய வீடுகள் கட்டப்பட்டு வருவ தாலும் எல்லை பரப்பு விரி வாகிக்கொண்டே செல்கின் றது.

கூடுதல் இன்ஸ்பெக்டர்

இதனால் இந்த போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் காவலர்களுக்கு சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றப்புல னாய்வு பணிச்சுமை அதிக ரித்துள்ளது. இதன் காரண மாக குற்றங்களை கண்டுபிடிப் பதில் தொய்வு ஏற்பட்டு வரு கிறது. குறிப்பாக ராமநாதபு ரம் நகரில் கேணிக்கரை போலீஸ் நிலையத்தில் மட் டுமே 8க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்து வருகின்றன. இந்த வழக்கு விசாரணைகளை மேற்கொள்ள போதிய அதி காரிகள் இல்லை.

எல்லை பரப்பு அதிகமாக உள்ள போலீஸ் நிலையங்க ளுக்கு சட்டம்ஒழுங்கு மற் றும் குற்றப்பிரிவுக்கு தனித் தனி இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப் படுவது வழக்கம். இவ்வாறு ராமநாதபுரம் மாவட்டத்தில் முதுகுளத்தூர் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் 2 இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப் பட்டு பணியாற்றி வருகின்ற னர். இதேபோல கேணிக்கரை போலீஸ் நிலையத்திலும் பணிச்சுமை கருதியும், இப் பகுதி மக்களின் பாதுகாப்பு கருதியும் சட்டம்ஒழுங்கு, குற்றப்புலனாய்வுக்கு தனி இன்ஸ்பெக்டர்கள் நிய மிக்க வேண்டும். இதற்கு மாவட்ட போலீஸ் நிர்வாகம் அரசுக்கு பரிந்துரை செய்து உரிய அனு மதி பெற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top