இராமநாதபுரம் மாவட்டத்தில்
10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மின் கட்டணம் செலுத்தவில்லை
மின்வாரியத்தினர் அதிர்ச்சி தகவல்
இராமநாதபுரம்:
இராமநாதபுரம் மாவட்டத்தில் மின் திருட்டை தடுக்க தனி பறக்கும்படை அமைக்கப் பட்டுள்ளது. இவர்கள் மின் இணைப்பு களை ஆய்வு செய்து மின்சாரத்தை திருடுபவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். இந்த நிலையில் மாவட்டத்தில் மின் கட்டணம் செலுத் தாதவர்களின் எண்ணிக் கை யும் நாளுக்கு நாள் அதிகரித் துக்கொண்டே வருகிறது. தற்போதுள்ள நிலவரப்படி மாவட்டம் முழுவதும் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட் டோர் மின் கட்டணம் செலுத் தாமல் உள்ளனர்.
பொதுவாக கட்டணம் செலுத்தாத 20 நாளில் மின் இணைப்பு துண் டிக்கப்படுவது வழக்கம். ஆனால் போதிய பணியாளர் கள் இல்லாததால் மின் துண் டிப்பு பணி தேக்கமடைந்துள் ளது. இதன் காரணமாக மின் கட்ட ணம் செலுத்தாதவர்கள் தொடர்ந்து மின்சாரத்தை பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு ரூ.1 கோடிக்கு மேல் வருவாய் பாக்கி உள்ளதாக கூறப்படுகிறது.
0 comments