சென்னை வாலிபர் கொலை வழக்கில் கைதான பெண்ணுக்கு 3
காதலர்கள் விசாரணையில் திடுக்கிடும் தகவல்
காதலர்கள் விசாரணையில் திடுக்கிடும் தகவல்
பண்ருட்டி :
பண்ருட்டியில் சென்னையை சேர்ந்த மருந்து விற்பனை பிரதிநிதி கொல்லப்பட்ட வழக்கில் கைதான அவரது மனைவி கல்பனாவுக்கு 3 காதலர்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.
சென்னையை சேர்ந்த மருந்து விற்பனை பிரதிநிதி சீனுவாசன் இரண்டு வாரங்களுக்கு முன் கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது மனைவி கல்பனா, கள்ளக் காதலன் தினேஷ் பாபு, இவரது நண்பர் போட்டோகிராபர் முரளி கைது செய்யப்பட்டனர்.
போலீசில் தினேஷ்பாபு கொடுத்த வாக்குமூலத்தில், “நான் குறிஞ்சிப்பாடி கல்லூரியில் படித்தபோது அதே கல்லூரியில் படித்த வித்யா மீது காதல் ஏற்பட்டது. பின்னர் அவரது தோழி கல்பனாவுடன் பழக்கம் ஏற்பட்டு அவருடனும் காதலாக மாறியது. அவரை திருமணம் செய்ய கேட்டபோது, வீட்டில் எதிர்ப்பார்கள் என கூறி மறுத்தார்.
எனது தோழி வித்யா வை திருமணம் செய்து கொள்ளுங்கள். எப்போதும்போல நாம் சந்தோஷமாக இருக்கலாம் என கூறினார். அதன் படி, வித்யாவை நான் திருமணம் செய்த பிறகும் கல்பனாவுடன் தொடர்பு வைத்திருந்தேன். வேறு பெண்ணை திருமணம் செய்த பிறகும் என்னுடன் உறவு வைத்திருக்கிறாயே என நான் கேட்டதற்கு, பஸ்ட் லவ் இஸ் பெஸ்ட் லவ், உன்னை எப்போதும் மறக்க முடியாது என கல்பனா கூறினார்.
பின்னர், கல்பனாவுக்கு சீனுவாசனுடன் திருமணம் நடந்தது. அதன் பிறகும் சென்னை சென்று வந்தேன். இது சீனுவாசனுக்கு தெரியவந்ததால் அவரை கொல்லுமாறு கல்பனா வற்புறுத்தினார். நகை, பணம் தருவதாகவும் கூறியதால் சதி திட்டத்தை நிறைவேற்றினேன்'' என்றார். கைதான கல்பனாவுக்கு தினேஷ்பாபு தவிர மேலும் இரண்டு காதலர்கள் இருந்துள்ளனர்.
முதலில், கல்பனா காதலித்த ஒரு நபர் வெளிநாட்டில் தற்போது இருக்கிறாராம்.
மற்றொருவரை கல்பனா காதலித்தபோது, அந்த நபரை தினேஷ்பாபு ஆள் வைத்து அடித்து உதைத்து துரத்தியுள்ளார். போலீஸ் விசாரணையின்போது இந்த தகவல்கள் கிடைத்துள்ளன.
கல்பனாவுக்கு ஏசி அறை
கல்பனாவை அவரது பெற்றோர் செல்லமாக வளர்த்துள்ளனர். அவர் கேட்டதெல்லாம் வாங்கி கொடுத்துள்ளனர். அவருடைய அறைக்கு மட்டும் ஏசி பொருத்தி உள்ளனர். செல்லமாக வளர்ந்த அவர், தனது பெற்றோர் பார்த்து திருமணம் செய்து வைத்த கணவனுடன் ஒருநாள் கூட சந்தோஷமாக இருந்ததில்லை. ஏதாவது காரணத்தை சொல்லி தவிர்த்து வந்துள்ளார். தினேஷ்பாபு மீதான மோகத்தால் கொலைகாரி பட்டத்தோடு சிறையில் உள்ளார்.
விசாரணையின்போது, எல்லா கேள்விக்கும் சளைக்காமல் பயமின்றி பதில் கூறி உள்ளார்.
0 comments