16 April 2016

ஓய்வூதியதாரர்களுக்கு ஏப்.20 முதல் ஆதார் அடையாள அட்டை சிறப்பு முகாம்

ஓய்வூதியதாரர்களுக்கு 
ஏப்.20 முதல் 
ஆதார் அடையாள அட்டை சிறப்பு முகாம்




ஓய்வூதியதாரர்களுக்கு ஏப். 20 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை சார்நிலைக் கருவூலங்களில் ஆதார் அட்டை பெறுவதற்கான புகைப்படம் எடுக்கும் சிறப்பு முகாம் நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

 இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டக் கருவூலம் மற்றும் சார்நிலைக் கருவூலங்களில் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள் சம்பந்தப்பட்ட கருவூலங்களில் 2016 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர நேர்காணல் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. இதில், ஓய்வூதியதாரர்களின் ஆதார் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை எண் மற்றும் வருமான வரி கணக்கு எண் ஆகியவைகளின் நகல் பெறப்பட்டு மின் ஓய்வூதிய மென்பொருளில் தினமும் பதியப்பட்டு வருகிறது.

 ஓய்வூதியதாரர்களின் நலன் கருதி இதுவரையிலும் ஆதார் அடையாள அட்டை புகைப்படம், கைரேகை, கருவிழி பதிவு எடுக்காத ஓய்வூதியதாரர்களுக்கு ஏப். 20ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரையிலும் சம்பந்தப்பட்ட மாவட்டக் கருவூலம் மற்றும் சார்நிலைக் கருவூலங்களில் புகைப்படம் எடுக்கும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.  எனவே ஓய்வூதியதாரர்கள் தங்களுடைய குடும்ப அட்டை நகலினை கருவூலங்களில் சமர்ப்பித்து இச்சிறப்பு முகாமினை பயன்படுத்திக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top