‘ஆல் இன் ஆல் அழகுராஜா’வில் கவுரவ வேடத்தில் தோன்றுகிறார் ராதிகா ஆப்தே
சென்னை, செப். 13:-
கடந்த 2010ஆம் ஆண்டில் தெலுங்கிலும், இந்தியிலும் வெளிவந்து பின்னர் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட 'ரத்த சரித்திரம்' திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுடன் நடித்திருந்தவர் மும்பை நடிகை ராதிகா ஆப்தே.
இவர் தற்போது நடிகர் கார்த்தியுடன் 'ஆல் இன் ஆல் அழகுராஜா' என்ற படத்தில் நடித்து வருகின்றார். நடிகர் கார்த்தியும், அவரது ஜோடியாக காஜல் அகர்வாலும் நடிக்கும் இந்தத் திரைப்படம் டைரக்டர் ராஜேஷின் இயக்கத்தில் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இதில் நடிகை ராதிகா ஆப்தே கௌரவ வேடத்தில் தோன்ற இருக்கின்றார். கார்த்தியுடன் இணைந்து தோன்றும் இவரது கதாபாத்திரம் கதையில் ஒரு திருப்பத்தைக் கொடுக்கும் என்று தயாரிப்புக் குழுவின் நெருக்கமான பிரிவிலிருந்து தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த பத்து நாட்களாக படப்பிடிப்பிற்காகப் பொள்ளாச்சியில் தங்கியிருக்கும் ராதிகா ஆப்தே, இன்னும் சில தினங்களுக்குள் தன்னுடைய பகுதியினை நிறைவு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
0 comments