வெங்கட் பிரபுவுடன் இணைகிறார் சூர்யா
நடிகர் சூர்யா அடுத்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தினை சூர்யா புதியதாக ஆரம்பித்துள்ள டி2 என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.
மங்காத்தா படம் முடிந்ததும் இயக்குனர் வெங்கட் பிரபு சூர்யாவை வைத்து படம் இயக்க விரும்பினார். ஆனால் அப்போது மாற்றான், சிங்கம் 2 படங்களில் சூர்யா பிஸியாக நடித்து கொண்டிருந்தார். அதனால் அப்போது வெங்கட் பிரபுவால் சூர்யாவை வைத்து படம் இயக்கமுடியாமல் போனது.
தற்போது சூர்யாவை சந்தித்த வெங்கட் பிரபு புதிய படத்தின் கதையை கூறியுள்ளார். சூர்யாவிற்கு கதை பிடித்துபோக வரும் ஏப்ரலில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
0 comments