டெல்லி சட்டப் பேரவை தேர்தல் : வாக்குப் பதிவு துவக்கம்
புதுடெல்லி:
டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. டெல்லி சட்டப்பேரவையில் 70 தொகுதிகளிலும் வாக்குப் பதிவு துவங்கியது. டெல்லி மாநில சட்டப்பேரவையில் மொத்தம் 70 இடங்கள் உள்ளன. இம்மாநிலத்தை கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ச்சியாக 3 முறை வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சி செய்து வருகிறது. 75 வயதான இதன் முதல்வர் ஷீலா தீட்சித், 4வது முறையாக அதிகாரத்தை வழங்கும்படி மக்களிடம் ஓட்டு வேட்டையாடினார். டெல்லி தேர்தலில் வழக்கத்துக்கு மாறாக இம்முறை பெரியளவில் பரபரப்பு ஏற்பட்டதற்கு, புதிதாக களம் கண்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிதான் முக்கிய காரணம்.
கருத்து கணிப்புகளில் இக்கட்சிக்கு கணிசமான இடங்கள் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஊழலுக்கு எதிரான பிரசாரத்தை மேற்கொண்டு வருவதால், டெல்லி மக்களிடையே இக்கட்சி தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால், இம்மாநிலத்தில் இம்முறை மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. தேர்தல் களத்தில் மொத்தம் 810 வேட்பாளர்கள் உள்ளனர்.
இவர்களின் தலைவிதியை 1.19 கோடி வாக்காளர்கள் முடிவு செய்ய உள்ளனர். இவர்களில் 4.05 லட்சம் வாக்காளர்கள் புதியவர்கள். காங்கிரசும், ஆம் ஆத்மியும் 70 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன. பாஜ 66 இடங்களில் போட்டியிடுகிறது. பகுஜன் சமாஜ் 69, தேசியவாத காங்கிரஸ் 9, சமாஜ்வாடி 27 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன.
மற்ற 224 பேர் சுயேச்சைகள். இன்று பதிவாகும் வாக்குகள், 8ம் தேதி எண்ணப்படுகின்றன. அன்றைய தினம், டெல்லியை அடுத்து ஆளப் போகும் கட்சி எது என்பது தெரிந்து விடும்.
கருத்து கணிப்புகளில் இக்கட்சிக்கு கணிசமான இடங்கள் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஊழலுக்கு எதிரான பிரசாரத்தை மேற்கொண்டு வருவதால், டெல்லி மக்களிடையே இக்கட்சி தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால், இம்மாநிலத்தில் இம்முறை மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. தேர்தல் களத்தில் மொத்தம் 810 வேட்பாளர்கள் உள்ளனர்.
இவர்களின் தலைவிதியை 1.19 கோடி வாக்காளர்கள் முடிவு செய்ய உள்ளனர். இவர்களில் 4.05 லட்சம் வாக்காளர்கள் புதியவர்கள். காங்கிரசும், ஆம் ஆத்மியும் 70 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன. பாஜ 66 இடங்களில் போட்டியிடுகிறது. பகுஜன் சமாஜ் 69, தேசியவாத காங்கிரஸ் 9, சமாஜ்வாடி 27 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன.
மற்ற 224 பேர் சுயேச்சைகள். இன்று பதிவாகும் வாக்குகள், 8ம் தேதி எண்ணப்படுகின்றன. அன்றைய தினம், டெல்லியை அடுத்து ஆளப் போகும் கட்சி எது என்பது தெரிந்து விடும்.
0 comments