பரமக்குடி அருகே விடுதி மாணவிகளுக்கு
வாந்தி,மயக்கம் ஏற்பட்டதால்
ஆஸ்பத்திரியில் சிகிச்சை
பரமக்குடி, ஜூன் 20:
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ளது பார்த்திபனூர். இந்த ஊரில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு மாணவர்களும், மாணவிகளும் படித்து வருகின்றனர். தங்கி படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக விடுதிகளும் உள்ளது.
இதில் பெண்கள் விடுதியில் நேற்று மதியம் சாப்பாட்டுடன் சிக்கன், முட்டை வழங்கப்பட்டுள்ளது. இரவு சாப்பாட்டுடன் ரசம் வழங்கப்பட்டுள்ளது. இதை விடுதியில் உள்ள மாணவிகள் அனைவரும் சாப்பிட்டுள்ளனர். இதில் 14 மாணவிகளுக்கு திடீரென வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. அவர்கள் உடனடியாக பரமக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.
இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. தகவலை கேட்ட பெற்றோர்கள் அலறி அடித்துக் கொண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்தனர். மாணவிகளின் வாந்தி-மயக்கத்திற்கு இரவு சாப்பாடுதான் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
0 comments