20 June 2013

பரமக்குடி அருகே விடுதி மாணவிகளுக்கு வாந்தி,மயக்கம் ஏற்பட்டதால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை

பரமக்குடி அருகே விடுதி மாணவிகளுக்கு 

வாந்தி,மயக்கம்   ஏற்பட்டதால் 

 ஆஸ்பத்திரியில் சிகிச்சை

பரமக்குடி, ஜூன் 20:

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ளது பார்த்திபனூர். இந்த ஊரில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு மாணவர்களும், மாணவிகளும் படித்து வருகின்றனர். தங்கி படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக விடுதிகளும் உள்ளது.


இதில் பெண்கள் விடுதியில் நேற்று மதியம் சாப்பாட்டுடன் சிக்கன், முட்டை வழங்கப்பட்டுள்ளது. இரவு சாப்பாட்டுடன் ரசம் வழங்கப்பட்டுள்ளது. இதை விடுதியில் உள்ள மாணவிகள் அனைவரும் சாப்பிட்டுள்ளனர். இதில் 14 மாணவிகளுக்கு திடீரென வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. அவர்கள் உடனடியாக பரமக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.

இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. தகவலை கேட்ட பெற்றோர்கள் அலறி அடித்துக் கொண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்தனர். மாணவிகளின் வாந்தி-மயக்கத்திற்கு இரவு சாப்பாடுதான் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top