மண்டபம் மீனவர்களின் நீதிமன்றக் காவல்
பிப்ரவரி 3-ம் தேதி வரை நீட்டிப்பு
இராமேஸ்வரம், ஜன. 20:
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 15 பேர் கச்சத்தீவு பகுதியில் கடந்த 2ம் தேதி மீன்பிடித்தபோது, அவர்களை இலங்கை கடற்படை சிறை பிடித்தது. பின்னர் அவர்கள் புத்தளம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீர்க்கொழும்பு சிறையில் அடைக்கப்பட்டனர்.
அவர்களின் நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து அவர்கள் இன்று மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்களின் நீதிமன்றக் காவலை பிப்ரவரி 3-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
0 comments