26 December 2013

உச்சிப்புளி அருகே ரெயில் முன் பாய்ந்து 2 குழந்தைகளுடன் பெண் தற்கொலை

உச்சிப்புளி அருகே ரெயில் முன் பாய்ந்து 
2 குழந்தைகளுடன் பெண் தற்கொலை




இராமநாதபுரம், டிச. 26:

                   மதுரையில் இருந்து இராமேசுவரத்திற்கு தினமும் பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் இன்று காலை 6.20 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டது.

காலை 9 மணி அளவில் இராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவை நிலையத்திற்கு ரெயில் வந்தது. அங்கு பயணிகள் இறங்கியதும், உச்சிப்புளி நோக்கி ரெயில் புறப்பட்டது.

இந்த ரெயில் உச்சிப்புளி கடற்படை விமான நிலையம் அருகே சென்றபோது, 3 மற்றும் 2 வயது குழந்தைகளுடன் வந்த 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், திடீரென ரெயில் முன் பாய்ந்துள்ளார்.

இதில் ரெயிலில் அடிபட்ட 3 பேரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இதுகுறித்து ரெயிலில் பயணம் செய்த கார்டு, உச்சிப்புளி ரெயில்வே அதிகாரிக்கு தகவல் கொடுத்தார்.

அதன் பேரில் ரெயில்வே போலீசார் சம்பவ இடம் விரைந்தனர். 2 குழந்தைகளுடன் தற்கொலை செய்த பெண் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top