பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கை:
இராமநாதபுரம்–ஆர்.எஸ்.மடை இடையே
சாலையை சீரமைக்க நிதி ஒதுக்கீடு
இராமநாதபுரம்:
பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இராமநாதபுரம் முதல் ஆர்.எஸ்.மடை வரையிலான சாலையை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சாலை
இராமநாதபுரத்தை அடுத்துள்ள கீழக்கரையில் பல்வேறு கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும் நகராட்சி பகுதியான கீழக் கரை, புண்ணிய தலமான ஏர்வாடி தர்கா, திருப்புல்லாணி போன்ற பகுதிகளுக்கு இராமநாதபுரத்தில் இருந்து ரெயில்வே கேட், ஆர்.எஸ்.மடை வழியாக மாநில நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை போன்ற ஊர்களுக்கும் இந்த வழியாகத்தான் சாலை போக்குவரத்து உள்ளது.
இந்த நிலையில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த சாலை போக்குவரத்து காரணமாக இராமநாதபுரம் ரெயில்வே கேட் பகுதியில் இருந்து ஆர்.எஸ்.மடை வழியாக செல்லும் சாலை சேதமடைந்து போக்கு வரத்துக்கு லாயக்கற்றதாக உள்ளது. இந்த சாலையை சரி செய்யாமல் அப்போது ஒட்டு வேலைகள் மட்டும் மேற்கொள்ளப்பட்டதால் அந்த பகுதி இருசக்கர வாகனங்களில் கூட செல்ல முடியாத நிலைக்கு மாறிவிட்டது. இந்த சாலையின் அவலம் குறித்து பொதுமக்கள் கோரிக்கை விடுக்கும் போதெல்லாம் கிழக்கு கடற்கரை சாலை வரப்போகிறது என்று காரணம் காட்டி அதிகாரிகள் தொடர்ந்து ஒட்டுப்போடும் வேலைகளையே செய்து வருகின்றனர்.
நடவடிக்கை
ஆனால் இதற்கு மாறாக கிழக்கு கடற்கரை சாலையின் வழித்தடத்தில் மாற்றம் செய்து பட்டணம்காத்தான் அருகே புறவழிச்சாலை அமைக்கப்பட்டு ஆர்.எஸ்.மடையுடன் இணைக்கப்பட்டது. இதன் பின்னரும் ரெயில்வே கேட் முதல் ஆர்.எஸ்.மடை வரையிலான சாலையினை சீரமைக்க வழி ஏற்படவில்லை. இதனால் மோசமான நிலையில் இருந்த இந்த சாலை தற்போது குண்டும் குழியுமாகி விபத்தை ஏற்படுத்தும் அளவுக்கு சென்று விட்டது. இதுகுறித்து பொது மக்கள், பக்தர்கள் வாகன ஓட்டிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதற்கு தற்போது விடிவு காலம் ஏற்பட்டுள்ளது. இராமநாதபுரம் ரெயில்வே கேட் முதல் ஆர்.எஸ்.மடை வரையி லான சாலையை புதிதாக போட அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த சாலை அமைப்பதற்கான நிதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து டெண்டர் விடப்பட்டு பணி கள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இராமநாதபுரம் முதல் ஆர்.எஸ்.மடை வரையிலான சாலையை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சாலை
இராமநாதபுரத்தை அடுத்துள்ள கீழக்கரையில் பல்வேறு கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும் நகராட்சி பகுதியான கீழக் கரை, புண்ணிய தலமான ஏர்வாடி தர்கா, திருப்புல்லாணி போன்ற பகுதிகளுக்கு இராமநாதபுரத்தில் இருந்து ரெயில்வே கேட், ஆர்.எஸ்.மடை வழியாக மாநில நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை போன்ற ஊர்களுக்கும் இந்த வழியாகத்தான் சாலை போக்குவரத்து உள்ளது.
இந்த நிலையில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த சாலை போக்குவரத்து காரணமாக இராமநாதபுரம் ரெயில்வே கேட் பகுதியில் இருந்து ஆர்.எஸ்.மடை வழியாக செல்லும் சாலை சேதமடைந்து போக்கு வரத்துக்கு லாயக்கற்றதாக உள்ளது. இந்த சாலையை சரி செய்யாமல் அப்போது ஒட்டு வேலைகள் மட்டும் மேற்கொள்ளப்பட்டதால் அந்த பகுதி இருசக்கர வாகனங்களில் கூட செல்ல முடியாத நிலைக்கு மாறிவிட்டது. இந்த சாலையின் அவலம் குறித்து பொதுமக்கள் கோரிக்கை விடுக்கும் போதெல்லாம் கிழக்கு கடற்கரை சாலை வரப்போகிறது என்று காரணம் காட்டி அதிகாரிகள் தொடர்ந்து ஒட்டுப்போடும் வேலைகளையே செய்து வருகின்றனர்.
நடவடிக்கை
ஆனால் இதற்கு மாறாக கிழக்கு கடற்கரை சாலையின் வழித்தடத்தில் மாற்றம் செய்து பட்டணம்காத்தான் அருகே புறவழிச்சாலை அமைக்கப்பட்டு ஆர்.எஸ்.மடையுடன் இணைக்கப்பட்டது. இதன் பின்னரும் ரெயில்வே கேட் முதல் ஆர்.எஸ்.மடை வரையிலான சாலையினை சீரமைக்க வழி ஏற்படவில்லை. இதனால் மோசமான நிலையில் இருந்த இந்த சாலை தற்போது குண்டும் குழியுமாகி விபத்தை ஏற்படுத்தும் அளவுக்கு சென்று விட்டது. இதுகுறித்து பொது மக்கள், பக்தர்கள் வாகன ஓட்டிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதற்கு தற்போது விடிவு காலம் ஏற்பட்டுள்ளது. இராமநாதபுரம் ரெயில்வே கேட் முதல் ஆர்.எஸ்.மடை வரையி லான சாலையை புதிதாக போட அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த சாலை அமைப்பதற்கான நிதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து டெண்டர் விடப்பட்டு பணி கள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 comments