சென்னையில் மசாஜ் கிளப்பில் விபசாரம் :
பிரபல விபசார தாதா கன்னட பிரசாத்தின் பெண் கூட்டாளி கைது
சென்னை:
சென்னையில் மசாஜ் கிளப்பில் விபசாரம் செய்ததாக, பிரபல விபசார தாதா கன்னட பிரசாத்தின் பெண் கூட்டாளி கைது செய்யப்பட்டார்.
சோதனை
சென்னையில் மசாஜ் கிளப்புகளில் மசாஜ் என்ற போர்வையில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு நிறைய புகார்கள் வந்தன. இதனால் சந்தேக வளையத்தில் இருக்கும் மசாஜ் கிளப்புகளில் அதிரடி சோதனை நடத்தி, புரோக்கர்கள், மற்றும் விபசார அழகிகளை போலீசார் பிடித்து வருகிறார்கள். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 6 மசாஜ் கிளப்புகளில் சோதனை நடத்தி, 9 புரோக்கர்களை கைது செய்துள்ளனர்.
மசாஜ் போர்வையில் விபசாரத்தில் தள்ளப்பட்ட 10 வெளிமாநில இளம்பெண்களும் மீட்கப்பட்டனர். நேற்று சென்னை கீழ்கட்டளை, மேடவாக்கம் மெயின் ரோட்டில் உள்ள ஒரு மசாஜ் கிளப்பில் சோதனை நடத்தப்பட்டது.
கைது
சோதனையில் அங்கு விபசாரம் நடத்துவது கண்டறியப்பட்டது. இதன்பேரில் அந்த மசாஜ் கிளப்பின் உரிமையாளர் ஹேமலதா என்ற ஆயிஷா (வயது 38), கிளப்பின் பங்குதாரர் பாரதிகண்ணன்(36) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் பிரபல விபசார தாதா, கன்னட பிரசாத்தின் நெருங்கிய கூட்டாளிகள் ஆவார்கள்.
அங்கு விபசாரத்தில் ஈடுபட்டிருந்த இளம்பெண் ஒருவரும் மீட்கப்பட்டார். பாரதி கண்ணன் ஒரு சினிமா படம் தயாரித்துள்ளார் என்றும், அதற்காக அவர் தனது பெயரை பாரதிகண்ணன் என்று மாற்றிக் கொண்டுள்ளார் என்றும் போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் மீது ஏற்கனவே விபசார வழக்குகள் இருப்பதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
0 comments