தென் ஆப்ரிக்கா 500 ரன் குவிப்பு இக்கட்டான நிலையில் இந்தியா
டர்பன்:
டர்பன் டெஸ்டில் இந்திய அணியின் மோசமான பந்துவீச்சால் தென் ஆப்ரிக்கா 500 ரன் குவித்தது. 2வது இன்னிங்சில் இந்தியா இக்கட்டான நிலையில் உள்ளது.இந்தியா, தென் ஆப்ரிக்கா இடையேயான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் டர்பனில் நடக்கிறது.
முதல் இன்னிங்சில் இந்தியா 334 ரன் எடுத்தது. 3ம் நாள் முடிவில் தென் ஆப்ரிக்கா முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 299 ரன் எடுத்திருந்தது. காலிஸ் 78 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 4ம் நாள் ஆட்டம் நேற்று நடந்தது. இதில், இந்திய பந்துவீச்சாளர்கள் படுமோசமாக பந்து வீசினர். நைட் வாட்ச்மேன் ஸ்டெய்ன் விக்கெட்டை விரைவில் வீழ்த்த முடியவில்லை.இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட காலிஸ், தனது கடைசி டெஸ்டில் அபார சதம் அடித்தார்.
நிதானமாகவும், பொறுப்புடனும் ஆடி தென் ஆப்ரிக்க அணிக்கு முன்னிலை பெற்று தந்தார். 115 ரன் எடுத்திருந்த நிலையில் இவர் ஜடேஜா பந்தில் ஆட்டமிழந்தார். ஸ்டெய்ன் 44 ரன்னில் வெளியேறினார். இதையடுத்து, தென் ஆப்ரிக்காவின் முதல் இன்னிங்ஸ் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.
நிதானமாகவும், பொறுப்புடனும் ஆடி தென் ஆப்ரிக்க அணிக்கு முன்னிலை பெற்று தந்தார். 115 ரன் எடுத்திருந்த நிலையில் இவர் ஜடேஜா பந்தில் ஆட்டமிழந்தார். ஸ்டெய்ன் 44 ரன்னில் வெளியேறினார். இதையடுத்து, தென் ஆப்ரிக்காவின் முதல் இன்னிங்ஸ் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனாலும், இந்தியாவின் பந்துவீச்சு சுத்தமாக எடுபடாததால் பிளஸ்சிஸ், பீட்டர்சன் அதிரடியாக ரன்களை குவித்தனர். இந்த ஜோடி 8வது விக்கெட்டுக்கு 110 ரன்களை சேர்த்தது. பீட்டர்சன் 61 ரன்னில் ஆட்டமிழந்தார்.பிளஸ்சிஸ் (43) ரன் அவுட் ஆக, மோர்க்கல் 2வது பந்திலேயே வெளியேறினார்.
இறுதியில் தென் ஆப்ரிக்காக முதல் இன்னிங்சில் 500 ரன்கள் என்ற வலுவான நிலையை எட்டியது. 166 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. முரளி விஜய் 6 ரன்னில் அவுட் ஆனார். தவான், புஜாரா ஜோடி முன்னெச்சரிக்கையாக தற்காப்பு ஆட்டத்தை கையில் எடுத்தது. 87 பந்தில் 19 ரன் என மிக பொறுமையாக ஆடிய தவான், பிளஸ்சிசின் அபார கேட்சால் வெளியேறினார்.
இறுதியில் தென் ஆப்ரிக்காக முதல் இன்னிங்சில் 500 ரன்கள் என்ற வலுவான நிலையை எட்டியது. 166 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. முரளி விஜய் 6 ரன்னில் அவுட் ஆனார். தவான், புஜாரா ஜோடி முன்னெச்சரிக்கையாக தற்காப்பு ஆட்டத்தை கையில் எடுத்தது. 87 பந்தில் 19 ரன் என மிக பொறுமையாக ஆடிய தவான், பிளஸ்சிசின் அபார கேட்சால் வெளியேறினார்.
இந்திய அணி 33 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 63 ரன்களுடன் இருந்தது. புஜாரா 31 ரன்னிலும், கோஹ்லி 7 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். இன்றே ஆட்டத்தின் கடைசி நாள் என்பதால் தோல்வியை தவிர்க்கவே இந்திய அணி போராட வேண்டியிருக்கிறது.
0 comments