ரஷ்யா ரயில் நிலையத்தில் தற்கொலைப்படை பெண் தாக்குதல்
மாஸ்கோ :
ரஷ்யாவின் வோல்கோகிராட் ரயில் நிலையத்தில் பெண் தீவிரவாதி ஒருவர் நேற்று நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 18 பேர் பலியாயினர், 40க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
ரஷ்யாவின் வடக்கு காகஸ்சஸ் பகுதியில் உள்ள பிரபலமான தொழில் நகரம் வோல்கோகிராட். இங்குள்ள ரயில் நிலையம் நேற்று வழக்கம்போல் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. நுழைவாயிலில் பொருத்தப்பட்டிருக்கும் மெட்டல் டிடெக்டர் கருவியை கடந்து செல்வதற்காக ஏராளமான பயணிகள் வரிசையில் நின்றிருந்தனர். அப்போது அங்கு நின்ற பெண் ஒருவர் தன் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார். பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் சிக்கி 18 பேர் உடல் சிதறி பலியாயினர்.
40க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அங்கு போலீசாரும், மீட்பு குழுவினரும் உடனடியாக விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.வோல்கோகிராட் நகரில் கடந்த அக்டோபர் 21ம் தேதி அன்று, பெண் தீவிரவாதி ஒருவர் மனித குண்டு தாக்குதல் நடத்தினார். அதில் 6 பேர் பலியாயினர்.
40க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அங்கு போலீசாரும், மீட்பு குழுவினரும் உடனடியாக விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.வோல்கோகிராட் நகரில் கடந்த அக்டோபர் 21ம் தேதி அன்று, பெண் தீவிரவாதி ஒருவர் மனித குண்டு தாக்குதல் நடத்தினார். அதில் 6 பேர் பலியாயினர்.
அந்தப் பெண், முஸ்லிம் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர் என கண்டறியப்பட்டது. வடக்கு காகஸ்சஸ் பகுதியை முஸ்லிம் பகுதியாக அறிவிக்கக் கோரி இப்பகுதியில் உள்ள தீவிரவாதிகள் போராடி வருகிறார்கள். வோல்கோகிராட் அருகில் உள்ள சோச்சி நகரில் பிப்ரவரி மாதம் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெறவுள்ளது. இதை சீர்குலைக்கும் முயற்சியில் தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என ரஷ்யா கருதுகிறது.
0 comments