31 December 2013

இராமேசுவரம் கலங்கரை விளக்கத்தை பொதுமக்கள் பார்க்கலாம் விரைவில் அனுமதி

இராமேசுவரம் கலங்கரை விளக்கத்தை 
பொதுமக்கள் பார்க்கலாம் விரைவில் அனுமதி 



இராமேசுவரம்:

                 இராமேசுவரத்தில் உள்ள கலங்கரை விளக்கத்தை சுற்றி பார்க்க சுற்றுலா பயணிகளுக்கு விரைவில் அனுமதி அளிக்கப்பட உள்ளது.

கலங்கரைவிளக்கம்

இராமேசுவரம் ஓலைக்குடா கடற்கரையில் 17 மீட்டர் உயரத்தில் புதிய கலங்கரை விளக்கம் செயல்பட்டு வருகிறது. மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் கடலுக்கு சென்று விட்டு திரும்பும்போது இராமேசுவரத்தை அடையாளம் காண்பதற்காக இது ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய கப்பல் போக்குவரத்து துறை சார்பில் உருவாக்கப்பட்ட இந்த கலங்கரை விளக்கமானது கடந்த 2005 ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகிறது. இந்த கலங்கரை விளகத்தில் உள்ள விளக்குகளின் வெளிச்சம் கடற்கரையிலிருந்து சுமார் 20 கிலோ மீட்டர் வரை உள்ள கடல் பகுதிக்கு தெரியும்.

அதுபோல் தானியங்கி விளக்குகளை கொண்ட கலங்கரை விளக்கத்தில் காலை மற்றும் மாலை நேரங்களில் ஒவ்வொரு மாதங்களின் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப தானாகவே எரிந்து அணைந்து விடும் சிறப்புத் தன்மை கொண்டதாகும்.

விரைவில் அனுமதி

தற்போது சென்னையில் உள்ள கலங்கரை விளக்கத்தை சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு கடல் அழகை ரசித்து வருகின்றனர். அதுபோல் இராமேசுவரம் ஓலைக்குடா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கத்திலும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளது.

இதை, மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜி.கே.வாசன் விரைவில் அறிவிக்க உள்ளார் என இராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரவிச்சந்திர ராமவன்னி தெரிவித்துள்ளார்

Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top