இராமேசுவரத்துக்கு பிளாஸ்டிக் படகு மூலம் வந்த
4 இலங்கை அகதிகள் கைது
இராமேசுவரம்:
பிளாஸ்டிக் படகில் இராமேசுவரத்துக்கு வந்த 4 இலங்கை அகதிகளை கடற்படையினர் கைது செய்தனர்.
அகதிகள்
இராமேசுவரம் கடல் பகுதியில் நேற்று இந்திய கடற்படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கோதண்டராமர் கோவில் அருகே ஒரு பிளாஸ்டிக் படகு வந்து கொண்டிப்பதை பார்த்த கடற்படையினர் அங்கு விரைந்து சென்று அந்த படகை மடக்கி பிடித்து சோதனையிட்டனர். அப்போது அந்த படகு இலங்கையை சேர்ந்தது என்பதும், அதில் ஒரு குழந்தை உள்பட 4 பேர் வந்திருப்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து கடற்படையினர் அவர்கள் 4 பேரையும் இராமேசுவரத்தில் உள்ள கடற்படை முகாமுக்கு அழைத்து வந்தனர். அவர்களிடம் கடற்படை கமாண்டர் அமித்அபாநந்தி, க்யூ பிரிவு சப்- இன்ஸ்பெக்டர் சந்தனமாரி மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் இலங்கை யாழ்ப்பாணம் பகுதியை சேர்ந்த நிர்மலன் (வயது 24), இவரது மனைவி நிஷாந்தினி(23), இவர்களது ஒரு வயது குழந்தை தில்சன், மற்றும் படகோட்டி கலையரசன்(31) என்பதும், மன்னார் பகுதியில் இருந்து 30-ந்தேதி இரவு படகில் புறப்பட்டு அக தியாக வந்திருப்பதும் தெரிய வந்தது.
எதிர்ப்பு
விசாரணையில் நிஷாந்தினி கூறியதாவது:-
பிளாஸ்டிக் படகில் இராமேசுவரத்துக்கு வந்த 4 இலங்கை அகதிகளை கடற்படையினர் கைது செய்தனர்.
அகதிகள்
இராமேசுவரம் கடல் பகுதியில் நேற்று இந்திய கடற்படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கோதண்டராமர் கோவில் அருகே ஒரு பிளாஸ்டிக் படகு வந்து கொண்டிப்பதை பார்த்த கடற்படையினர் அங்கு விரைந்து சென்று அந்த படகை மடக்கி பிடித்து சோதனையிட்டனர். அப்போது அந்த படகு இலங்கையை சேர்ந்தது என்பதும், அதில் ஒரு குழந்தை உள்பட 4 பேர் வந்திருப்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து கடற்படையினர் அவர்கள் 4 பேரையும் இராமேசுவரத்தில் உள்ள கடற்படை முகாமுக்கு அழைத்து வந்தனர். அவர்களிடம் கடற்படை கமாண்டர் அமித்அபாநந்தி, க்யூ பிரிவு சப்- இன்ஸ்பெக்டர் சந்தனமாரி மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் இலங்கை யாழ்ப்பாணம் பகுதியை சேர்ந்த நிர்மலன் (வயது 24), இவரது மனைவி நிஷாந்தினி(23), இவர்களது ஒரு வயது குழந்தை தில்சன், மற்றும் படகோட்டி கலையரசன்(31) என்பதும், மன்னார் பகுதியில் இருந்து 30-ந்தேதி இரவு படகில் புறப்பட்டு அக தியாக வந்திருப்பதும் தெரிய வந்தது.
எதிர்ப்பு
விசாரணையில் நிஷாந்தினி கூறியதாவது:-
இலங்கை யாழ்ப்பாணம் பகுதியில் வசித்து வந்தோம். நாங்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். எங்களது காதலுக்கு எனது கணவரின் அம்மா முழுமையாக எதிர்ப்பு தெரிவித்து எங்களை சேர்ந்து வாழவிடாமல் இலங்கை போலீசில் புகார் செய்து சித்ரவதை செய்து வருகிறார். மேலும் என் கணவருக்கு வேறு திருமணம் செய்து வைக்கவும் முயற்சி செய்து வருகிறார். இதில் என் கணவருக்கு உடன்பாடு இல்லை. இதனால் நாங்கள் நிம்மதியாக வாழ இந்தியாவுக்கு வந்துள்ளோம்.
இலங்கையில் இந்தியா அளித்துள்ள நிதியில் இருந்து இந்திய வீடு திட்டத்தின் கீழ் தமிழ் மக்களுக்காக கட்டப்பட்டு வரும் வீடுகள் எதுவும் முழுமையாக தமிழ் மக்களுக்கு போய் சேரவில்லை. இந்தியா கொடுத்துள்ள பணத்தை இலங்கை அரசே வைத்துக் கொள்கிறது. தரமில்லாத வீடுகளை கட்டிக்கொடுத்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார். குழந்தை உள்ளிட்ட 4 அகதிகளையும் கடற் படையினர் மண்டபம் கடலோர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜோதி பாசுவிடம் ஒப்படைத்தனர்.இதையடுத்து அவர்கள் மீது பாஸ்போர்ட் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்களை புழல் சிறைக்கு அனுப்பி வைக்க கடலோர போலீ சார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
0 comments