பாகிஸ்தானில் தீவிரவாதி சயீத் தலைமையில் தொழுகை
இந்தியாவுக்கு எதிராக திமிர் பேச்சு
லாகூர், ஆக. 10:–
மும்பையில் கடந்த 2008–ம் ஆண்டு நவம்பரில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். அதில் 6 அமெரிக்கர்கள் உள்பட 166 பேர் உயிரிழந்தனர்.
மும்பையில் கடந்த 2008–ம் ஆண்டு நவம்பரில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். அதில் 6 அமெரிக்கர்கள் உள்பட 166 பேர் உயிரிழந்தனர்.
இத்தாக்குதலை லஷ்கர்–இ– தொய்பா தீவிரவாதிகள் நடத்தினர். பாகிஸ்தானில் இந்த இயக்கம் தடை செய்யப்பட்டதை தொடர்ந்து தற்போது ஜமாத்– உத்–தவா என்ற பெயரில் இயங்குகிறது.
மும்பை தாக்குதலுக்கு இந்த இயக்கத்தின் தலைவன் தீவிரவாதி ஹபீஷ் சயீத் மூளையாக செயல்பட்டான். எனவே, இவனை தங்களிடம் ஒப்படைக்கும்படி இந்தியா வலியுறுத்தி வருகிறது.
ஆனால் அதற்கான ஆதாரம் இல்லை என கூறி அவனை ஒப்படைக்க பாகிஸ்தான் மறுத்து வருகிறது. இதற்கிடையே அவனது தலைக்கு அமெரிக்கா ரூ.36 கோடி பரிசு அறிவித்துள்ளது. அவனது போட்டோக்களுடன் கூடிய சுவரொட்டிகள் பாகிஸ்தானின் லாகூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஒட்டப்பட்டுள்ளன.
இந்த நிலையில், பாகிஸ்தானில் நேற்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, லாகூரில் தீவிரவாதி ஹபீஷ் சயீத் தலைமையில் சிறப்பு தொழுகை நடந்தது. அங்குள்ள புகழ் பெற்ற கடாபி மைதானத்தில் நடந்த தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அவர்களில் தீவிரவாதிகளும் அடங்குவர்.
இதற்கிடையே ‘டுவிட்டர்’ இணையதளத்தில் இந்தியாவுக்கு எதிராக தனது கருத்தை சயீத் வெளியிட்டு இருக்கிறான். அதில், காஷ்மீர், பாலஸ்தீனம், பர்மா உள்ளிட்ட இடங்களில் கொடுங்கோல் ஆட்சி நடக்கிறது. இந்த நன்னாளில் அங்கு சுதந்திர காற்று வீசட்டும்.
அதற்கான நேரம் இப்போது அருகே வந்து விட்டது. எனவே, அவர்களுக்கு ரம்ஜான் நல்வாழ்த்துக்களை தெரிவிப்போம். விரைவில் உலகமே அவர்களுக்கு ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவிக்கும். உங்கள் தியாகங்களை கடவுள் வீணாக்க மாட்டார்.
இஸ்லாம் பலம் பெறும். அந்த காலம் காஷ்மீரில் விரைவில் உருவாகும் என தெரிவித்து உள்ளான்.
மும்பை தாக்குதலுக்கு இந்த இயக்கத்தின் தலைவன் தீவிரவாதி ஹபீஷ் சயீத் மூளையாக செயல்பட்டான். எனவே, இவனை தங்களிடம் ஒப்படைக்கும்படி இந்தியா வலியுறுத்தி வருகிறது.
ஆனால் அதற்கான ஆதாரம் இல்லை என கூறி அவனை ஒப்படைக்க பாகிஸ்தான் மறுத்து வருகிறது. இதற்கிடையே அவனது தலைக்கு அமெரிக்கா ரூ.36 கோடி பரிசு அறிவித்துள்ளது. அவனது போட்டோக்களுடன் கூடிய சுவரொட்டிகள் பாகிஸ்தானின் லாகூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஒட்டப்பட்டுள்ளன.
இந்த நிலையில், பாகிஸ்தானில் நேற்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, லாகூரில் தீவிரவாதி ஹபீஷ் சயீத் தலைமையில் சிறப்பு தொழுகை நடந்தது. அங்குள்ள புகழ் பெற்ற கடாபி மைதானத்தில் நடந்த தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அவர்களில் தீவிரவாதிகளும் அடங்குவர்.
இதற்கிடையே ‘டுவிட்டர்’ இணையதளத்தில் இந்தியாவுக்கு எதிராக தனது கருத்தை சயீத் வெளியிட்டு இருக்கிறான். அதில், காஷ்மீர், பாலஸ்தீனம், பர்மா உள்ளிட்ட இடங்களில் கொடுங்கோல் ஆட்சி நடக்கிறது. இந்த நன்னாளில் அங்கு சுதந்திர காற்று வீசட்டும்.
அதற்கான நேரம் இப்போது அருகே வந்து விட்டது. எனவே, அவர்களுக்கு ரம்ஜான் நல்வாழ்த்துக்களை தெரிவிப்போம். விரைவில் உலகமே அவர்களுக்கு ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவிக்கும். உங்கள் தியாகங்களை கடவுள் வீணாக்க மாட்டார்.
இஸ்லாம் பலம் பெறும். அந்த காலம் காஷ்மீரில் விரைவில் உருவாகும் என தெரிவித்து உள்ளான்.
0 comments