இளவரசன் மரணத்திற்கு முன் எழுதிய இரு கடிதங்கள்
தர்மபுரி இளவரசன் கடைசியாக தன் மனைவி திவ்யாவுக்கு எழுதிய உருக்கமான காதல் கடிதம்...
தர்மபுரி:
தர்மபுரி இளவரசன் தனது காதல் மனைவி திவ்யாவுக்கு கடைசியாக எழுதிய
உருக்கமான காதல் கடிதம் பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளன.
அக்கடிதத்தில் இளவரசன் எழுதியிருப்பதாவது:
என் அன்புக்காதலி திவ்யாவுக்கு,
நீ என்னுடன் இருந்த நாட்கள் என் வாழ்நாளில் மறக்கமுடியாது. நீ என்னை
விட்டுப் பிரிந்த நாளில் இருந்து என்னால் எதுவும் செய்ய இயலவில்லை. காரணம்,
எனக்கு உன்னை மிகவும் பிடிக்கும். ஜுலை 1 ம் தேதிவரை நீ வருவாய், என்னுடன்
மீண்டும் சேர்ந்து வாழ்வாய் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.
ஒருவேளை நீ அன்று என்னுடன் வரவில்லை என்றால் கண்டிப்பாக நான் இந்த
உலகத்தில் இருக்க மாட்டேன்.
நீ ஏற்கனவே உன் அப்பா இறந்ததற்கு காரணம் நீ தான் என்று நினைத்து கஷ்டப்படுகிறாய். நீ அடிக்கடி என்னிடம் சொல்வாய்
"என் அப்பா உண்மையாகவே என் மீது பாசம் வைத்தவராய் இருந்தால் என்மேல்
கொலைப்பழியை போட்டுவிட்டு என் வாழ்க்கையை இப்படி செய்திருக்க மாட்டார்"
என்று சொல்வாய். அதுபோலவே நீ என்னிடம் கேட்பாய் என்பது எனக்குத் தெரியும்.
ஆனால் உண்மையாகவே என்னால் உன்னை விட்டு வாழமுடியவில்லை. ஏன் எனில் அந்த
அளவிற்கு நாம் இரண்டு பேரும் இருந்தோம்.
எனக்கு
உன்ன ரொம்ப பிடிக்கும் திவ்யா. எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும். நான் உனக்கு
என்ன துரோகம் செஞ்சேன் ? என்கூட ஏன் வாழ வரமாட்டேங்கறன்னு கண்டிப்பா
எனக்குத் தெரியல ......
...நாம்ம இரண்டுபேரும் எவ்வளவு கஷ்டத்துக்கும் மேல ஒன்னு சேர்ந்தோம்னு உனக்கு நல்லா தெரியும்.
எனக்கு
ரொம்ப ஆசை திவ்யா. நம்ம இரண்டு பேரும் நல்லா வாழனும். நம்மள கேவலமாப்
பாத்தவங்க முன்னாடி பொறாமைப்படும் அளவுக்கு உன்ன அழகா, கண்கலங்காம
வச்சுக்கனும்னு எனக்கு ரொம்ப ஆசை. உனக்கு ஒன்னு தெரியுமா...நீ என்னோட எல்லா
விசயத்துலையும் சேர்ந்திருக்க. ஆனா இப்போ எதிலும் எங்கூட இல்ல. ரொம்ப
கஷ்டமா இருக்குடா.
Please திவ்யா என்ன
வெறுக்காத எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும். தயவு செய்து என்னை
மன்னித்துவிடு. நீ என்னிடம் கேட்கலாம், உண்மையாகவே நீ என் மேல் பாசம்
வைத்தவனாக இருந்தால் ஏன் நீ என்னை விட்டு போகனும்னு....
..கண்டிப்பா
சொல்றேன்.நான் உன்ன விட்டுப் போகனும்னு நெனக்கல. எனக்கு உன்னோட சேர்ந்து
வாழனும்னு ரொம்ப ஆசை. ஆனால், என்னால உன்னை பிரிந்து வாழ முடியல திவ்யா.
என்னை மன்னிச்சுடு.
நான் இந்த உலகத்தை விட்டுப் போறேன். இன்னொரு ஜென்மம் இருந்தா நீயும் நானும் ஒரே சாதியில பொறந்து பெத்தவங்க சம்மதத்தோடு கல்யாணம் பண்ணிக்கனும்னு எனக்கு ஆசையா இருக்குடா திவ்யா.
I Love so much baby....I love so much.... என்று எழுதியிருக்கிறார்.
0 comments