என்னுடைய கடைசி ஆசை,
தர்மபுரி இளவரசன் கடைசியாக தன் தந்தைக்கு எழுதிய
உருக்கமான கடிதத்தில்...
தர்மபுரி:
தர்மபுரி இளவரசன் தனது தந்தைக்கு கடைசியாக எழுதிய உருக்கமான கடிதம் பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளன.
தன் அப்பாவுக்கு எழுதிய கடிதத்தில்:
என் பாசத்திற்குரிய அப்பாவிற்கு....
என்னை மன்னிச்சுடுங்க. அப்பா அம்மாவையும், பாலாஜி, அக்கா எல்லோரையும் பாத்துகோங்க. தயவு செஞ்சி அம்மாவை கஷ்டப்படுத்தாதீங்கப்பா.
என் நேசமிகு அம்மாவிற்கு
அம்மா என்னை மன்னிச்சுடு. எனக்கு உன்னை நல்லா வெச்சி பார்க்கனும்னு ஆசை.
நீயும் அப்பாவும் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பீங்க என்னை வளர்த்து படிக்க
வைக்க, ஆனால் என்னால உங்களுக்கு எதுவுமே செய்ய முடியல...... ...அடுத்த
ஜென்மம்னு ஒன்னு இருந்தா நீயும், அப்பாவும் எனக்கு குழந்தையா பிறக்கனும்.
இந்த ஜென்மத்துல பட்ட கடனை நான் உங்களுக்கு அடுத்த ஜென்மம் தீர்க்கனும்.
என்றும் என்னோட Best Friend என் அண்ணன் பாலாஜிக்கு.... என்னை மன்னிச்சிடு பாலா... நீ எனக்கு எவ்வளவோ சொன்ன தப்பான முடிவு எடுக்காதன்னு. ஆனால் என்னால முடியல பாலா. I am really so sorry Bala..
என்னோட இறப்புக்கு யாரும் காரணமில்லை. இது என் சுயமான முடிவாகும்.
என்னுடைய கடைசி ஆசை,
நான் இறந்த பின்பு என்னைப் பார்க்க திவ்யா வருவார் என்ற நம்பிக்கை
இருக்கிறது. அப்படி ஒருவேளை திவ்யா வந்தால் யாரும் அவளைத் திட்ட வேண்டாம்.
அவளை அனுமதிக்க வேண்டும்.
Please,
அவளை யாரும் கோபமாகப் பேசவேண்டாம். திவ்யா ரொம்ப நல்ல பொண்ணு. எனக்கு அவளை
ரொம்பப் பிடிக்கும். என்னால அவ கஷ்டப்படறது எனக்கு பிடிக்கல.
அவளாவது. வாழ்க்கைல சந்தோசமா இருக்கட்டும் என்றும் இளவரசன் கடிதம் எழுதி வைத்துவிட்டு இறந்ததாக கூறப்படுகிறது.
0 comments