5 November 2013

காமம் கண்ணை மறைத்த கொடூரம் பலாத்காரம் செய்து மாணவி கொலை

காமம் கண்ணை மறைத்த கொடூரம் 
பலாத்காரம் செய்து மாணவி கொலை


உடுமலை : 

            திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த கோட்டமங்கலம் ஊராட்சி வெள்ளியம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேல் (47). விவசாயி. இவரது மனைவி ராசாத்தி. மகள் புஷ்பலட்சுமி (17), பிளஸ் 2 மாணவி. இவர்களது பக்கத்து வீட்டில் வசிப்பவர் அருண்குமார் (28). பொள்ளாச்சியில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் பெற்று கொடுப்பவர். திருமணம் ஆகி ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. தீபாவளி விடுமுறையை முன்னிட்டு அருண்குமார் வெள்ளியம்பாளையத்துக்கு வந்திருந்தார்.

நேற்று முன்தினம் தங்கவேலுவும், அவரது மனைவியும் பக்கத்து ஊரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டனர். வீட்டில் புஷ்பலட்சுமி, அவரது தாத்தா நல்லாகவுண்டர், பாட்டி லட்சுமி இருந்தனர். அப்போது அருண்குமார் தங்கவேல் வீட்டுக்கு வந்து டி.வி. பார்த்துக்கொண்டிருந்தார். தாத்தா, பாட்டி வீட்டுக்கு வெளியே இருந்தனர். திடீரென கதவை உள்பக்கமாக அருண்குமார் பூட்டினார். சற்று நேரம் கழித்து பதற்றத்துடன் வெளியே வந்தார்.

நல்லாகவுண்டர் வீட்டுக்குள் போய் பார்த்தபோது, புஷ்பலட்சுமி அலங்கோலமாக கிடந்ததை கண்டு சத்தம்போட்டார். அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து, தப்ப முயன்ற அருண்குமாரை பிடித்தனர். பின்னர், வாயில் துப்பட்டா துணி திணிக்கப்பட்டு, மூச்சு திணறிய நிலையில் கிடந்த புஷ்பலட்சுமியை உடுமலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அவரை பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். அருண்குமார், புஷ்பலட்சுமியின் வாயில் துணியை திணித்து பலாத்காரம் செய்துள்ளார். மூச்சு திணறி புஷ்பலட்சுமி இறந்தது தெரியவந்துள்ளது. அருண்குமாரை குடிமங்கலம் போலீசார் கைது செய்தனர்.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top