புதுடெல்லி:
பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ, காலிஸ்தான் தீவிரவாதிகளை பயன்படுத்தி பாஜ பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடியை கொல்ல சதித் திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய அரசை உளவுத் துறை(ஐ.பி.) எச்சரித்துள்ளது.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஆட்சியின் போது 2002ம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தில் சிறுபான்மையினர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, இந்தியன் முஜாகிதீன் உள்பட சில அமைப்புகளின் தீவிரவாதிகள் அவரது உயிருக்கு குறி வைத்துள்ளதாக தெரிய வந்தது. மேலும், மோடிக்கு தீவிரவாத அமைப்புகளிடம் இருந்து அடிக்கடி மிரட்டல்களும் வரத் தொடங்கியதை அடுத்து அவருக்கு இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டது. அதன்படி, விஐபிக்களுக்கான சிறப்பு பாதுகாப்பு ஏற்பாட்டில் மோடி வெளிமாநிலங்களுக்கு பயணம் செய்யும் போது கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், கடந்த அக்டோபர் 27ம் தேதி பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் பிரமாண்டமான பொதுக் கூட்டத்தில் பேசினார். அப்போது அவரை குறிவைத்து தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்நிலையில், கடந்த அக்டோபர் 27ம் தேதி பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் பிரமாண்டமான பொதுக் கூட்டத்தில் பேசினார். அப்போது அவரை குறிவைத்து தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில், 6 பேர் உயிரிழந்தனர். இந்த குண்டுவெடிப்பு, இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகளின் கைவரிசையாக இருக்கலாம் என போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, மோடியின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இதை ஏற்று, பிரதமருக்கு இணையான பாதுகாப்பு வழங்க உள்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். பிரதமர் மன்மோகன்சிங், சோனியா போன்றோருக்கு வழங்கப்படுவதை போன்று கமாண்டோ படையினரின் சிறப்பு பாதுகாப்பு மோடிக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, மோடியின் உயிருக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ குறிவைத்துள்ளதாக ரகசிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையே, மோடியின் உயிருக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ குறிவைத்துள்ளதாக ரகசிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து, மத்திய உளவுத்துறை(ஐ.பி) அதிகாரிகள் மத்திய அரசுக்கு அளித்துள்ள ரகசிய அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
வெளிநாடுகளில் தலைமறைவாக தங்கியிருந்து செயல்படும் காலிஸ்தான் தீவிரவாதிகளை பயன்படுத்தி மோடியை கொலை செய்ய பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ சதித் திட்டம் தீட்டியுள்ளதாக தெரிய வந்துள்ளது. மோடியின் பிரசாரக் கூட்டங்களில் இந்த சதித் திட்டங்கள் அரங்கேற்றப்படலாம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் இருந்து பஞ்சாப்பை பிரித்து சீக்கியர்களுக்கென காலிஸ்தான் என்ற தனி நாடு கோரி, காலிஸ்தான் தீவிரவாதிகள் முன்பு போராட்டம் நடத்தி வந்தனர். இதனால், சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு பஞ்சாப் கலவர பூமியாக காணப்பட்டது. அதன்பின், காலிஸ்தான் தீவிரவாதிகள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்ட பிறகு, அந்த அமைப்பில் இருந்த சிலர் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
வெளிநாடுகளில் தலைமறைவாக தங்கியிருந்து செயல்படும் காலிஸ்தான் தீவிரவாதிகளை பயன்படுத்தி மோடியை கொலை செய்ய பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ சதித் திட்டம் தீட்டியுள்ளதாக தெரிய வந்துள்ளது. மோடியின் பிரசாரக் கூட்டங்களில் இந்த சதித் திட்டங்கள் அரங்கேற்றப்படலாம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் இருந்து பஞ்சாப்பை பிரித்து சீக்கியர்களுக்கென காலிஸ்தான் என்ற தனி நாடு கோரி, காலிஸ்தான் தீவிரவாதிகள் முன்பு போராட்டம் நடத்தி வந்தனர். இதனால், சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு பஞ்சாப் கலவர பூமியாக காணப்பட்டது. அதன்பின், காலிஸ்தான் தீவிரவாதிகள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்ட பிறகு, அந்த அமைப்பில் இருந்த சிலர் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
தற்போது பாகிஸ்தானில் தலைமறைவாக பதுங்கியிருக்கும் காலிஸ்தான் தீவிரவாதிகளை பயன்படுத்தி மோடியை கொல்ல ஐ.எஸ்.ஐ திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்திருக்கிறது. இதனால், நரேந்திர மோடிக்கு பாதுகாப்பை மேலும் பலப்படுத்த முடிவு செய்துள்ளதாக உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
0 comments