23 October 2013

தமிழக சட்டசபை இன்று கூடுகிறது தாது மணல் கொள்ளை விவகாரம் குறித்து பிரச்சனை எழுப்ப எதிர்கட்சிகள் முடிவு

தமிழக சட்டசபை இன்று கூடுகிறது
தாது மணல் கொள்ளை விவகாரம் குறித்து 
பிரச்சனை எழுப்ப எதிர்கட்சிகள் முடிவு


சென்னை: 

             தமிழக சட்டசபை இன்று கூடுகிறது. தாது மணல் கொள்ளை விவகாரம் குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று சபையில் வலியுறுத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. 

தமிழக சட்டசபையின் குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. காலை 10 மணிக்கு சபை கூடியதும், ஏற்காடு தொகுதி அதிமுக எம்எல்ஏவாக இருந்த பெருமாளின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படுகிறது. இதற்கான தீர்மானத்தை சபாநாயகர் தனபால் கொண்டு வருவார். உறுப்பினர்கள் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தியதும், சபை ஒத்திவைக்கப்படும்.

பின்னர், சபாநாயகர் தலைமையில் பேரவை அலுவல் ஆய்வுக் குழு கூடும். இதில் சபையை எத்தனை நாட்கள் நடத்துவது என்று முடிவு செய்யப்படும். அதன்படி, கூட்டம் நடக்கும். சபை 5 நாட்கள் நடைபெறும் என்று தெரிகிறது. இந்த கூட்டத் தொடரில், மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்தும் தாக்குதல் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் குறித்து எதிர்க்கட்சிகள் பிரச்னையை எழுப்பும்.

தாது மணல் கொள்ளை குறித்து வருவாய் துறை செயலாளர் தலைமையிலான குழு ஆய்வு நடத்தி வருகிறது. இது தொடர்பான வெள்ளை அறிக்கையை சபையில் தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசை வலியுறுத்த எதிர்க்கட்சியினர் திட்டமிட்டுள்ளனர். மேலும், இலங்கையில் நடக்கவுள்ள காமென்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க கோரும் தீர்மானத்தை தமிழக அரசு கொண்டுவரவுள்ளது.   




Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top