சென்னை மாநகரில் இன்று முதல் மினி பஸ்களை இயக்க முடிவு
சென்னை:
சென்னை மாநகரில் இன்று முதல் மினி பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி எல்லைகள் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
விரிவாக்கப் பகுதிகளில் மாநகர போக்குவரத்துக்கழக பஸ்கள் அதிகளவில் இயக்கப்படவில்லை. குறுகலான சாலைகள், சிறிய தெருக்கள் வழியாக செல்ல வேண்டியிருப்பதால் புறநகர் பகுதியில் குறைந்த பஸ்களே ஓடுகின்றன. இதனால், இந்த பகுதிகளில் ஷேர் ஆட்டோக்கள், டாடா மேஜிக் வேன்கள் அதிகளவில் இயக்கப்படுகின்றன.
இவை முறையாக இயக்கப்படுவதில்லை. மேலும், சாலைகளில் ஆங்காங்கே இந்த வண்டிகளை நிறுத்துவதால், போக்குவரத்து நெருக்கடியை ஏற்படுத்துகின்றன. இதன் காரணமாக, சென்னை மாநகர எல்லைக்குள் மினிபஸ்கள் இயக்க அரசு முடிவெடுத்தது. விரைவில் 100 மினி பஸ்கள் இயக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
அதன்படி, மினிபஸ்களுக்கு டெண்டர்கள் கோரப்பட்டன. இதில் இரு நிறுவனங்களுக்கு இடையே ஏற்பட்ட போட்டியால் மினி பஸ் வருவதில் தாமதம் ஏற்பட்டது. கடைசியில், இரு நிறுவனங்களுக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து, மினி பஸ்களுக்கு பாடி கட்டப்பட்டு, தற்போது மாநகர போக்குவரத்து கழகத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
புதிய பஸ்கள் புறநகரில் உட்புற கிராமங்களுக்கு மட்டுமே இயக்கப்படும் என்பதால், அதற்கான ரூட் சார்ட் மற்றும் பயண கட்டணம் நிர்ணயிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
புதிய பஸ்களும் அந்தந்த வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. தற்போது வந்துள்ள மினி பஸ்களும் முதல்வருக்கு விருப்பமான பச்சை நிறத்தில் உள்ளன என்பதும், இவை இன்று முதல் இயக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
விரிவாக்கப் பகுதிகளில் மாநகர போக்குவரத்துக்கழக பஸ்கள் அதிகளவில் இயக்கப்படவில்லை. குறுகலான சாலைகள், சிறிய தெருக்கள் வழியாக செல்ல வேண்டியிருப்பதால் புறநகர் பகுதியில் குறைந்த பஸ்களே ஓடுகின்றன. இதனால், இந்த பகுதிகளில் ஷேர் ஆட்டோக்கள், டாடா மேஜிக் வேன்கள் அதிகளவில் இயக்கப்படுகின்றன.
இவை முறையாக இயக்கப்படுவதில்லை. மேலும், சாலைகளில் ஆங்காங்கே இந்த வண்டிகளை நிறுத்துவதால், போக்குவரத்து நெருக்கடியை ஏற்படுத்துகின்றன. இதன் காரணமாக, சென்னை மாநகர எல்லைக்குள் மினிபஸ்கள் இயக்க அரசு முடிவெடுத்தது. விரைவில் 100 மினி பஸ்கள் இயக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
அதன்படி, மினிபஸ்களுக்கு டெண்டர்கள் கோரப்பட்டன. இதில் இரு நிறுவனங்களுக்கு இடையே ஏற்பட்ட போட்டியால் மினி பஸ் வருவதில் தாமதம் ஏற்பட்டது. கடைசியில், இரு நிறுவனங்களுக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து, மினி பஸ்களுக்கு பாடி கட்டப்பட்டு, தற்போது மாநகர போக்குவரத்து கழகத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
புதிய பஸ்கள் புறநகரில் உட்புற கிராமங்களுக்கு மட்டுமே இயக்கப்படும் என்பதால், அதற்கான ரூட் சார்ட் மற்றும் பயண கட்டணம் நிர்ணயிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
புதிய பஸ்களும் அந்தந்த வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. தற்போது வந்துள்ள மினி பஸ்களும் முதல்வருக்கு விருப்பமான பச்சை நிறத்தில் உள்ளன என்பதும், இவை இன்று முதல் இயக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 comments