அமெரிக்க ஆயுத கப்பல் மர்மம் கேப்டன் வாலன்டின் கதை படமாகிறது
தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே இந்திய கடல் எல்லைக்குள் ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்த அமெரிக்க தனியார் செக்யூரிட்டி நிறுவனம் அட்வென் போர்டுக்கு சொந்தமான ‘சீமேன் கார்டு ஓகியா கப்பலை கடற்படை அதிகாரிகள் சிறைபிடித்தனர். கப்பலில் இருந்த 35 அதிநவீன துப்பாக்கிகள், 5 ஆயிரத்து 675 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுதொடர்பாக மத்திய உளவு அமைப்பான ‘ரா‘ மற்றும் கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தி கப்பல் கேப்டன் டட்னிக் வாலன்டின் உள்பட 35 பேரை கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் கப்பலின் கேப்டன் டட்னிக் வாலன்டின் 2011ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி எம்.வி. பிலிடா என்ற கப்பலில் சென்ற போது மொம்பாசா துறைமுகம் அருகே உள்ள மலிண்டி கடல் பகுதியில் சோமாலியா கடற்கொள்ளையர்களால் 8 இந்தியர்களுடன் சிறைபிடிக்கப்பட்டார். சுமார் 11 மாதங்கள் பிணைக்கைதியாக இருந்த அவரை விடுவிக்க 8 மில்லியன் டாலர் கேட்கப்பட்டது. பின்னர் 2.6. மில்லியன் டாலர் கொடுத்து அவர் மீட்கப்பட்டுள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இந்நிலையில் பரபரப்பான நிகழ்வுகளை சினிமாவாக்கி காசு பார்க்கும் ஹாலிவுட் திரையுலகம் சீமென் கார்டு ஓகியா கேப்டன் டட்னிக் வாலன்டின் கதையையும் விட்டு வைக்கவில்லை. உக்ரைன் நாட்டில் பிறந்த இவர் அந்நாட்டு கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்று பின்னர் தனியார் செக்யூரிட்டி நிறுவன கப்பலில் பணியாற்றுவது குறித்தும், அவர் கப்பலில் பணி செய்தபோது எதிர்கொண்ட இயற்கை சீற்றங்கள், சோமாலியா கடற்கொள்ளையர்களிடம் சிக்கி மீண்டது உள்ளிட்ட சம்பவங்களை கற்பனையுடன் கலந்து ‘ஆல் இஸ் லாஸ்ட்‘ (All is lost) என்ற பெயரில் இந்த படம் தயாராகிறது.
முழுக்க முழுக்க அட்வென்ச்சர் த்ரில்லராக தயாராகும் இந்த படத்தை ஹாலிவுட் இயக்குனர் ஜே.சி. சாண்டர் என்பவர் டைரக்ட் செய்கிறார். பிரபல ஹாலிவுட் நடிகர் ராபர்ட் ரெட்போர்டு இதில் கதாநாயகனாக நடிக்கிறார். அடுத்த மாதம் முதல் வாரம் இந்த படம் அமெரிக்காவில் வெளியாகிறது.
இதுதொடர்பாக மத்திய உளவு அமைப்பான ‘ரா‘ மற்றும் கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தி கப்பல் கேப்டன் டட்னிக் வாலன்டின் உள்பட 35 பேரை கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் கப்பலின் கேப்டன் டட்னிக் வாலன்டின் 2011ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி எம்.வி. பிலிடா என்ற கப்பலில் சென்ற போது மொம்பாசா துறைமுகம் அருகே உள்ள மலிண்டி கடல் பகுதியில் சோமாலியா கடற்கொள்ளையர்களால் 8 இந்தியர்களுடன் சிறைபிடிக்கப்பட்டார். சுமார் 11 மாதங்கள் பிணைக்கைதியாக இருந்த அவரை விடுவிக்க 8 மில்லியன் டாலர் கேட்கப்பட்டது. பின்னர் 2.6. மில்லியன் டாலர் கொடுத்து அவர் மீட்கப்பட்டுள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இந்நிலையில் பரபரப்பான நிகழ்வுகளை சினிமாவாக்கி காசு பார்க்கும் ஹாலிவுட் திரையுலகம் சீமென் கார்டு ஓகியா கேப்டன் டட்னிக் வாலன்டின் கதையையும் விட்டு வைக்கவில்லை. உக்ரைன் நாட்டில் பிறந்த இவர் அந்நாட்டு கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்று பின்னர் தனியார் செக்யூரிட்டி நிறுவன கப்பலில் பணியாற்றுவது குறித்தும், அவர் கப்பலில் பணி செய்தபோது எதிர்கொண்ட இயற்கை சீற்றங்கள், சோமாலியா கடற்கொள்ளையர்களிடம் சிக்கி மீண்டது உள்ளிட்ட சம்பவங்களை கற்பனையுடன் கலந்து ‘ஆல் இஸ் லாஸ்ட்‘ (All is lost) என்ற பெயரில் இந்த படம் தயாராகிறது.
முழுக்க முழுக்க அட்வென்ச்சர் த்ரில்லராக தயாராகும் இந்த படத்தை ஹாலிவுட் இயக்குனர் ஜே.சி. சாண்டர் என்பவர் டைரக்ட் செய்கிறார். பிரபல ஹாலிவுட் நடிகர் ராபர்ட் ரெட்போர்டு இதில் கதாநாயகனாக நடிக்கிறார். அடுத்த மாதம் முதல் வாரம் இந்த படம் அமெரிக்காவில் வெளியாகிறது.
0 comments