கூடங்குளம் அணுமின் நிலைய முதல் யூனிட்டில் 160 மெகாவாட் உற்பத்தி
நெல்லை :
கூடங்குளம் அணு மின் நிலைய முதல் யூனிட்டில் நேற்று 160 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. இது படிப்படியாக உயர்ந்து 1000 மெகாவாட்டாக உயரும். இந்த மின்சாரம் நெல்லை அபிஷேகப்பட்டியில் உள்ள மின் தொகுப்பில் இணைக்கப்பட்டது. 12 ஆண்டு கால உழைப்பிற்கு பிறகு கூடங்குளத்தில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது விஞ்ஞானிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் இந்தியா , ரஷ்யா கூட்டு முயற்சியுடன் ரூ.13 ஆயிரத்து 500 கோடி மதிப்பீட்டில் தலா 1000 மெகாவாட் உற்பத்தி திறனுள்ள இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் அணு உலைக்கான கட்டுமானப் பணிகள் கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கியது. 2007 டிசம்பரிலேயே மின் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. இன்று, நாளை என தள்ளிப் போய் இறுதியாக 2011ம் ஆண்டு டிசம்பர் மாதம் மின் உற்பத்தியை தொடங்க இந்த¤ய அணு சக்தி கழகம் திட்டமிட்டது. ஆனால் உள்ளூர் மக்கள் போராட்டம் காரணமாக அணு மின் நிலைய பணிகள் 6 மாத காலத்திற்கு நிறுத்தப்பட்டது.
பின்னர் கடந்த ஆண்டு மார்ச் மாதம்தான் அணு மின் நிலையம் செயல்பட தொடங்கியது. தொடர்ந்து அக்டோபர் மாதம் 2ம் தேதி முதல் அணு உலையில் எரிபொருள் நிரப்பப்பட்டது. எனினும் அணுமின் நிலையத்துக்கு எதிராக ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் இருந்ததால் மின் உற்பத்தி தாமதமானது. கடந்த மே மாதம் 6ம் தேதி கூடங்குளம் அணு மின் நிலையம் இயங்க தடையில்லை என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது.
கூடங்குளம் அணு மின் நிலையத்தின் முதல் அணு உலையில் அணுப் பிளவுக்கு கடந்த ஜூலை 11ம் தேதி இந்திய அணுசக்தி ஒழுங்கமைப்பு வாரியம் அனுமதி அளித்தது. ஜூலை 13ம் தேதி இந்திய அணுசக்தி துறை தலைவர் ஆர்.கே.சின்ஹா, அணுசக்தி கழக தலைவர் கே.சி.புரோகித் ஆகியோர் முன்னிலையில் முதல் அணு உலை அணுப்பிள வுக்கு உட்படுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து படிப்படியாக மின் உற்பத்தியை அதிகரித்து சோதனைகள் நடத்தப்பட்டு வந்தன. அணு உலையில் உருவாகும் வெப்ப ஆற்றல் நீராவி குழாய்கள் வழியாக செல்லும் பாதையில் வால்வுகளில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் மின் உற்பத்தி தாமதமாகி வந்தது. இந்நிலையில் நேற்று அதிகாலை 2.45 மணிக்கு கூடங்குளத்தில் 160 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. இதை கூடங்குளம் அணு மின் நிலைய வளாக இயக்குநர் ஆர்.எஸ்.சுந்தர் உறுதி செய்தார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘‘கூடங்குளம் முதல் அணு உலையில் அதிகாலை 2.45 மணிக்கு 160 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. தொடர்ந்து மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டு 3 நாட்களில் 400 மெகாவாட் என்ற நிலை எட்டப்படும். அதன் பின்னர் 500 மெகாவாட், 750 மெகாவாட், 1000 மெகாவாட் என ஒவ்வொரு நிலைகளாக அதிகரிக்கப்படும். ஒவ்வொரு நிலையிலும் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு ஆய்வின் முடிவுகள் மற்றும் அணுசக்தி ஒழுங்கமைப்பு வாரியத்தின் ஒப்புதல்களின் அடிப்படையில் அடுத்த செயல்பாடுகள் ஆரம்பிக்கப்படும்’’ என்றார்.
கூடங்குளத்தில் 6 ஆண்டுகளில் மின் உற்பத்தியை தொடங்க திட்டமிட்டிருந்த நிலையில் 12 ஆண்டுகள் கழித்து மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. பல்வேறு தடைகள், எதிர்ப¢புகள் அனைத்தையும் தாண்டி கூடங்குளம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதால் இந்திய, ரஷ்ய விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் இந்தியா , ரஷ்யா கூட்டு முயற்சியுடன் ரூ.13 ஆயிரத்து 500 கோடி மதிப்பீட்டில் தலா 1000 மெகாவாட் உற்பத்தி திறனுள்ள இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் அணு உலைக்கான கட்டுமானப் பணிகள் கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கியது. 2007 டிசம்பரிலேயே மின் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. இன்று, நாளை என தள்ளிப் போய் இறுதியாக 2011ம் ஆண்டு டிசம்பர் மாதம் மின் உற்பத்தியை தொடங்க இந்த¤ய அணு சக்தி கழகம் திட்டமிட்டது. ஆனால் உள்ளூர் மக்கள் போராட்டம் காரணமாக அணு மின் நிலைய பணிகள் 6 மாத காலத்திற்கு நிறுத்தப்பட்டது.
பின்னர் கடந்த ஆண்டு மார்ச் மாதம்தான் அணு மின் நிலையம் செயல்பட தொடங்கியது. தொடர்ந்து அக்டோபர் மாதம் 2ம் தேதி முதல் அணு உலையில் எரிபொருள் நிரப்பப்பட்டது. எனினும் அணுமின் நிலையத்துக்கு எதிராக ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் இருந்ததால் மின் உற்பத்தி தாமதமானது. கடந்த மே மாதம் 6ம் தேதி கூடங்குளம் அணு மின் நிலையம் இயங்க தடையில்லை என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது.
கூடங்குளம் அணு மின் நிலையத்தின் முதல் அணு உலையில் அணுப் பிளவுக்கு கடந்த ஜூலை 11ம் தேதி இந்திய அணுசக்தி ஒழுங்கமைப்பு வாரியம் அனுமதி அளித்தது. ஜூலை 13ம் தேதி இந்திய அணுசக்தி துறை தலைவர் ஆர்.கே.சின்ஹா, அணுசக்தி கழக தலைவர் கே.சி.புரோகித் ஆகியோர் முன்னிலையில் முதல் அணு உலை அணுப்பிள வுக்கு உட்படுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து படிப்படியாக மின் உற்பத்தியை அதிகரித்து சோதனைகள் நடத்தப்பட்டு வந்தன. அணு உலையில் உருவாகும் வெப்ப ஆற்றல் நீராவி குழாய்கள் வழியாக செல்லும் பாதையில் வால்வுகளில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் மின் உற்பத்தி தாமதமாகி வந்தது. இந்நிலையில் நேற்று அதிகாலை 2.45 மணிக்கு கூடங்குளத்தில் 160 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. இதை கூடங்குளம் அணு மின் நிலைய வளாக இயக்குநர் ஆர்.எஸ்.சுந்தர் உறுதி செய்தார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘‘கூடங்குளம் முதல் அணு உலையில் அதிகாலை 2.45 மணிக்கு 160 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. தொடர்ந்து மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டு 3 நாட்களில் 400 மெகாவாட் என்ற நிலை எட்டப்படும். அதன் பின்னர் 500 மெகாவாட், 750 மெகாவாட், 1000 மெகாவாட் என ஒவ்வொரு நிலைகளாக அதிகரிக்கப்படும். ஒவ்வொரு நிலையிலும் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு ஆய்வின் முடிவுகள் மற்றும் அணுசக்தி ஒழுங்கமைப்பு வாரியத்தின் ஒப்புதல்களின் அடிப்படையில் அடுத்த செயல்பாடுகள் ஆரம்பிக்கப்படும்’’ என்றார்.
கூடங்குளத்தில் 6 ஆண்டுகளில் மின் உற்பத்தியை தொடங்க திட்டமிட்டிருந்த நிலையில் 12 ஆண்டுகள் கழித்து மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. பல்வேறு தடைகள், எதிர்ப¢புகள் அனைத்தையும் தாண்டி கூடங்குளம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதால் இந்திய, ரஷ்ய விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
0 comments