ரூ.50க்காக தண்டவாளத்தில் அடித்து குழந்தையை
கொன்றவருக்கு இரட்டை ஆயுள்
சென்னை :
பணத்துக்காக உறவினரின் குழந்தையை கடத்திச் சென்று தண்டவாளத்தில் அடித்து கொலை செய்த வழக்கில் ராஜஸ்தானை சேர்ந்த வாலிபருக்கு செஷன்ஸ் நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. சவுகார்பேட்டையைச் சேர்ந்தவர் ஆனந்த். இவரது மனைவி ஷைலா. இவர்களின் மகன் மோனிக் (2). ஆனந்தின் அத்தை சாந்தா வழியில் சொந்தமான ஜுகுனு (எ) சந்திரகாந்த் அடிக்கடி ஆனந்த் வீட்டுக்கு வருவார். மோனிக்குடன் வீட்டில் விளையாடிக்கொண்டிருப்பார். இவர், ஷைலாவிடம் அடிக்கடி செலவுக்கு பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.
இந்நிலையில், 2008 செப்டம்பர் 25ம் தேதி ஆனந்த் வியாபார விஷயமாக வெளியூருக்கு போனபோது, அவரது வீட்டுக்கு வந்த ஜுகுனு குழந்தை மோனிக்குடன் விளையாடியுள்ளார். அப்போது, ஷைலாவிடம் தனக்கு ரூ.50 தருமாறு கேட்டுள்ளார். அதற்கு ஷைலா இல்லை என்று கூறியுள்ளார். இதையடுத்து, குழந்தையை தூக்கிக்கொண்டு வெளியில் விளையாடச் செல்வதாக கூறி ஜுகுனு புறப்பட்டார்.
குழந்தை மாயமானது குறித்து யானைக்கவுனி போலீசில் ஷைலா புகார் செய்துள்ளார். சிறிது நேரம் கழித்து போன் செய்த ஜுகுனு குழந்தையை திருமுல்லைவாயிலுக்கும் அம்பத்தூருக்கும் இடையே ரயில் தண்டவாளத்தில் போட்டு கொலை செய்து விட்டதாக தெரிவித்துள்ளார். அப்போது, எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறோம், குழந்தையை உயிருடன் கொண்டு வா என்று ஷைலாவின் உறவினர்கள் ஜுகுனுவிடம் கெஞ்சியுள்ளனர். அதற்கு, குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டான் என்று போன் இணைப்பை ஜுகுனு துண்டித்துவிட்டார்.
இதையடுத்து, ஷைலாவின் குடும்பத்தினர் உடனடியாக திருமுல்லைவாயில் ரயில் நிலையத்துக்கு சென்று தண்டவாளத்தில் இறங்கி குழந்தையை தேடினர். அங்கு குழந்தை மோனிக் தலை உடைந்து இறந்து கிடந்தான். ஜுகுனு சென்னையிலிருந்து தப்பி திருச்சிக்குச் சென்றுள்ளார். குழந்தை அணிந்திருந்த 11 கிராம் செயினை எடுத்து சென்ற அவர், அங்கு ஒரு அடகுக் கடையில் விற்று ரூ.10,800 வாங்கியுள்ளார்.
திருச்சியில் ஒரு சலூனுக்குச் சென்று மொட்டை அடித்துள்ளார். பின்னர் அங்கிருந்து மும்பை சென்றுள்ளார். இதையடுத்து, யானைக்கவுனி போலீசார் கடத்தல் மற்றும் கொலை வழக்கு பதிவு செய்து ஜுகுனுவை தேடி வந்தனர். இந்நிலையில், மும்பையில் சந்தேக வழக்கில் ஜுகுனுவை 2009 நவம்பர் 1ம் தேதி கைது செய்த மும்பை போலீசார் யானைக்கவுனி போலீசாருக்கு தகவல் தந்தனர். அவரை சென்னை அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கு முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் கடந்த 4 வருடங்களாக விசாரிக்கப்பட்டு வந்தது. வழக்கில் 43 பேரிடம் சாட்சி விசாரணை நடத்தப்பட்டது.
இறுதியாக முதன்மை செஷன்ஸ் நீதிபதி சொக்கலிங்கம் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு வக்கீல் எம்.எல்.ஜெகன் ஆஜரானார். ஜுகுனு தரப்பில் அவர் மனநிலை சரியில்லாதவர் என்று வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டதால் கடத்தல் பிரிவில் ஆயுள் தண்டனையும் ரூ.5000 அபராதமும், கொலை வழக் கில் ஆயுள் தண்டனையும் ரூ.5000 அபராதமும் விதிக்கப்படுகிறது என்று தீர்ப்பளித்தார். அபராத தொகையை கட்டத் தவறினால் ஒவ்வொரு பிரிவுக்கும் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தண்டனையை ஏககாலத் தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப் பில் கூறினார்.
‘தீர்ப்பால் நிம்மதி அடைந்துள்ளோம்’
தீர்ப்பைக் கேட்பதற்காக குழந்தை மோனிக்கின் தாய் ஷைலாவும், தந்தை ஆனந்தும் மற்றும் குடும்பத்தினரும் நீதிமன்றத்துக்கு வந்தார்கள். அதேபோல் ஜுகுனுவின் தந்தை சம்ரத்மால், அவரது தாய் இந்திராபாய் ஆகியோரும் வந்திருந்தனர். தீர்ப்பைக் கேட்டு வெளியே வந்த ஷைலா நிருபர்களிடம் கூறுகையில, ‘நான்கு ஆண்டாக இரவு தூக்கமே வரவில்லை. தீர்ப்பு எப்படி இருக்கும் என்றுதான் காத்திருந்தோம். நம்பிக்கை மோசடி செய்துவிட்டான். கடவுள் அவனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை கொடுத்திருக்கிறார். குழந்தையை பறிகொடுத்த எனக்குத்தான் அந்த வேதனை தெரியும். இப்போ ஓரளவு நிம்மதி அடைந்துள்ளோம்’’ என்றார்.
இந்நிலையில், 2008 செப்டம்பர் 25ம் தேதி ஆனந்த் வியாபார விஷயமாக வெளியூருக்கு போனபோது, அவரது வீட்டுக்கு வந்த ஜுகுனு குழந்தை மோனிக்குடன் விளையாடியுள்ளார். அப்போது, ஷைலாவிடம் தனக்கு ரூ.50 தருமாறு கேட்டுள்ளார். அதற்கு ஷைலா இல்லை என்று கூறியுள்ளார். இதையடுத்து, குழந்தையை தூக்கிக்கொண்டு வெளியில் விளையாடச் செல்வதாக கூறி ஜுகுனு புறப்பட்டார்.
குழந்தை மாயமானது குறித்து யானைக்கவுனி போலீசில் ஷைலா புகார் செய்துள்ளார். சிறிது நேரம் கழித்து போன் செய்த ஜுகுனு குழந்தையை திருமுல்லைவாயிலுக்கும் அம்பத்தூருக்கும் இடையே ரயில் தண்டவாளத்தில் போட்டு கொலை செய்து விட்டதாக தெரிவித்துள்ளார். அப்போது, எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறோம், குழந்தையை உயிருடன் கொண்டு வா என்று ஷைலாவின் உறவினர்கள் ஜுகுனுவிடம் கெஞ்சியுள்ளனர். அதற்கு, குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டான் என்று போன் இணைப்பை ஜுகுனு துண்டித்துவிட்டார்.
இதையடுத்து, ஷைலாவின் குடும்பத்தினர் உடனடியாக திருமுல்லைவாயில் ரயில் நிலையத்துக்கு சென்று தண்டவாளத்தில் இறங்கி குழந்தையை தேடினர். அங்கு குழந்தை மோனிக் தலை உடைந்து இறந்து கிடந்தான். ஜுகுனு சென்னையிலிருந்து தப்பி திருச்சிக்குச் சென்றுள்ளார். குழந்தை அணிந்திருந்த 11 கிராம் செயினை எடுத்து சென்ற அவர், அங்கு ஒரு அடகுக் கடையில் விற்று ரூ.10,800 வாங்கியுள்ளார்.
திருச்சியில் ஒரு சலூனுக்குச் சென்று மொட்டை அடித்துள்ளார். பின்னர் அங்கிருந்து மும்பை சென்றுள்ளார். இதையடுத்து, யானைக்கவுனி போலீசார் கடத்தல் மற்றும் கொலை வழக்கு பதிவு செய்து ஜுகுனுவை தேடி வந்தனர். இந்நிலையில், மும்பையில் சந்தேக வழக்கில் ஜுகுனுவை 2009 நவம்பர் 1ம் தேதி கைது செய்த மும்பை போலீசார் யானைக்கவுனி போலீசாருக்கு தகவல் தந்தனர். அவரை சென்னை அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கு முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் கடந்த 4 வருடங்களாக விசாரிக்கப்பட்டு வந்தது. வழக்கில் 43 பேரிடம் சாட்சி விசாரணை நடத்தப்பட்டது.
இறுதியாக முதன்மை செஷன்ஸ் நீதிபதி சொக்கலிங்கம் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு வக்கீல் எம்.எல்.ஜெகன் ஆஜரானார். ஜுகுனு தரப்பில் அவர் மனநிலை சரியில்லாதவர் என்று வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டதால் கடத்தல் பிரிவில் ஆயுள் தண்டனையும் ரூ.5000 அபராதமும், கொலை வழக் கில் ஆயுள் தண்டனையும் ரூ.5000 அபராதமும் விதிக்கப்படுகிறது என்று தீர்ப்பளித்தார். அபராத தொகையை கட்டத் தவறினால் ஒவ்வொரு பிரிவுக்கும் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தண்டனையை ஏககாலத் தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப் பில் கூறினார்.
‘தீர்ப்பால் நிம்மதி அடைந்துள்ளோம்’
தீர்ப்பைக் கேட்பதற்காக குழந்தை மோனிக்கின் தாய் ஷைலாவும், தந்தை ஆனந்தும் மற்றும் குடும்பத்தினரும் நீதிமன்றத்துக்கு வந்தார்கள். அதேபோல் ஜுகுனுவின் தந்தை சம்ரத்மால், அவரது தாய் இந்திராபாய் ஆகியோரும் வந்திருந்தனர். தீர்ப்பைக் கேட்டு வெளியே வந்த ஷைலா நிருபர்களிடம் கூறுகையில, ‘நான்கு ஆண்டாக இரவு தூக்கமே வரவில்லை. தீர்ப்பு எப்படி இருக்கும் என்றுதான் காத்திருந்தோம். நம்பிக்கை மோசடி செய்துவிட்டான். கடவுள் அவனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை கொடுத்திருக்கிறார். குழந்தையை பறிகொடுத்த எனக்குத்தான் அந்த வேதனை தெரியும். இப்போ ஓரளவு நிம்மதி அடைந்துள்ளோம்’’ என்றார்.
0 comments