ஏற்காடு இடைத்தேர்தல்:
தி.மு.க.வுக்கு எம்.ஜி.ஆர். கழகம் ஆதரவு - ஆர்.எம். வீரப்பன்
சென்னை, அக்.22:
தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு எம்.ஜி.ஆர். கழக தலைவர் ராம.வீரப்பன் எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:–
நடைபெற உள்ள ஏற்காடு சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் குறித்து தங்களின் வேண்டுகோள் நிறைந்த அன்பான கடிதம் கிடைத்தது. எம்.ஜி.ஆர். கழகம் என்பது என்றைக்குமே திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோழமை அமைப்புதான்.
எனவே வருகிற இடைத்தேர்தலில் எம்.ஜி.ஆர். கழகத் தொண்டர்கள் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளரை ஆதரித்து வெற்றிபெறுகிற வகையில் தீவிரமாகத் தொண்டாற்றுவார்கள் என்ற உறுதியினைத் தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 comments