25 October 2013

டெல்லியில் பயங்கர குற்றவாளி உட்பட மூவர் என்கவுண்டரில் சுட்டு கொலை

டெல்லியில் பயங்கர குற்றவாளி உட்பட மூவர்
 என்கவுண்டரில் சுட்டு கொலை

டெல்லி: 

          டெல்லி மற்றும் அரியானா போலீசாரால் தேடப்பட்டு வந்த டாப் 10 குற்றவாளிகளில் ஒருவரான நீட்டு தபோடியா நேற்றிரவு டெல்லி போலீசாரால் என்கவுண்டரில் கொல்லப்பட்டான்.

டெல்லியை சேர்ந்த பிரபல ரவுடி நீட்டு தபோடியா மீது 50க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் வழக்குகள் நிலுவையில் இருந்தன. கடந்த சில ஆண்டுகளாக போலீசார் இவனை தேடி வந்தனர்.

இவனை பற்றிய தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு அளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. டெல்லியில் டாப் 10 கிரிமினல்களில் ஒருவரான இவர் நேற்று வசந்த்கன்ச் பகுதிக்கு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இரவு 11 மணி அளவில் போலீஸ் ஸ்பெஷல் கமிஷனர் ஸ்ரீவத்சவா தலைமையில் போலீஸ் படையினர் கிராண்ட் ஏரியா பகுதியில் மறைந்திருந்தனர். அப்போது ஒரு காரில் தபோடியா தனது கூட்டாளிகள் இருவருடன் அங்கு வந்தான். அவனை சுற்றிவளைத்த போலீசார் சரண் அடையுமாறு எச்சரித்தனர்.

உடனே, போலீசாரை நோக்கி தபோடியா சரமாரியாக துப்பாக்கியால் சுட்டான். போலீசார் திருப்பி சுட்டத்தில் காரில் இருந்த 3 பேரும் குண்டு பாய்ந்து உயிரிழந்தனர். தபோடியாவுடன் சுட்டுக் கொல்லப்பட்ட இரண்டு பேரில் ஒருவன் அலோக் குப்தா என்பது தெரிய வந்துள்ளது. இவன் மீதும் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. 3 வது நபரை பற்றிய விவரம் உடனடியாக தெரியவில்லை.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top