பேஸ்புக் பழக்கத்தால் விபரீதம் அம்பலம்
சாப்ட்வேர் டிசைனர் கொலை 3 வாலிபர்கள் பிடிபட்டனர்
சென்னை :
சாப்ட்வேர் டிசைனர் கொலையில் 3பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடிவருகின்றனர். பேஸ்புக் பழக்கத்தால் ஏற்பட்ட விபரீதம் விசாரணையில் தெரிந்தது. சிட்லப்பாக்கம் ராமகிருஷ்ணாபுரம் சுபாஷ் சந்திரபோஸ் தெருவை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி சாந்தி. இவர்கள் சிட்லப்பாக்கத்தில் மருத்துவ உபகரணம் தயாரிக்கும் கம்பெனியில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களது மகன் விஜயகுமார் (24), மயிலாப்பூரில் உள்ள தனியார் பிபிஓ கம்பெனியில் டிசைனராக வேலை பார்த்து வந்தார்.
கடந்த 15ம் தேதி வீட்டில் விஜயகுமார், கை, கால்கள் கட்டப்பட்டும் வாயில் துணி வைத்து அடைக்கப்பட்டும் சடலமாக கிடந்தார். கழுத்து நெரிக்கப்பட்ட தழும்பும், கன்னத்தில் அறைந்த அடையாளமும் இருந்தது. வீட்டில் இருந்த கம்ப்யூட்டர் மானிட்டர், செல்போன் திருடுபோயிருந்தது. புகாரின்பேரில் சிட்லப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: விஜயகுமாருக்கு பேஸ்புக் மூலம் திருப்பூரை சேர்ந்த தவுபிக் அஸ்லாம் (24) என்பவர் அறிமுகமானார். நாளடைவில் இருவருக்கும் ஓரின சேர்க்கை பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதற்காக அவர் சென்னை வந்துள்ளார். தவுபிக் அஸ்லாமின் அண்ணன் அஜ்மிர் காஜாவும் (24) அவ்வப்போது வந்து சென்றுள்ளார்.
இந்நிலையில்தான் விஜயகுமாரிடம் அதிக பணம் இருப்பது அவர்களுக்கு தெரிந்தது. இதைத் தொடர்ந்து 15ம் தேதி அவர்கள் சென்னை வந்தனர். அவர்கள் விஜயகுமாரிடம் பணம் கேட்டபோது அவர் தர மறுத்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த தவுபிக் அஸ்லாம், அஜ்மிர் காஜா மற்றும் திருப்பூரை சேர்ந்த வேல்முருகன் (26), தீரஜ் ஆகியோர் விஜயகுமாரின் கை, கால்களை கட்டி போட்டு கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரிந்தது.
மேலும் போலீசாரின் கவனத்தை திசை திருப்ப விஜயகுமார் வீட்டில் இருந்த கம்ப்யூட்டர் மானிட்டர், செல்போன், கேமரா, டிவிடி பிளேயர் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர். அவர்களிடம் இருந்து அவற்றை போலீசார் மீட்டனர். தவுபிக் அஸ்லாம், அஜ்மிர் காஜா, வேல்முருகன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
கடந்த 15ம் தேதி வீட்டில் விஜயகுமார், கை, கால்கள் கட்டப்பட்டும் வாயில் துணி வைத்து அடைக்கப்பட்டும் சடலமாக கிடந்தார். கழுத்து நெரிக்கப்பட்ட தழும்பும், கன்னத்தில் அறைந்த அடையாளமும் இருந்தது. வீட்டில் இருந்த கம்ப்யூட்டர் மானிட்டர், செல்போன் திருடுபோயிருந்தது. புகாரின்பேரில் சிட்லப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: விஜயகுமாருக்கு பேஸ்புக் மூலம் திருப்பூரை சேர்ந்த தவுபிக் அஸ்லாம் (24) என்பவர் அறிமுகமானார். நாளடைவில் இருவருக்கும் ஓரின சேர்க்கை பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதற்காக அவர் சென்னை வந்துள்ளார். தவுபிக் அஸ்லாமின் அண்ணன் அஜ்மிர் காஜாவும் (24) அவ்வப்போது வந்து சென்றுள்ளார்.
இந்நிலையில்தான் விஜயகுமாரிடம் அதிக பணம் இருப்பது அவர்களுக்கு தெரிந்தது. இதைத் தொடர்ந்து 15ம் தேதி அவர்கள் சென்னை வந்தனர். அவர்கள் விஜயகுமாரிடம் பணம் கேட்டபோது அவர் தர மறுத்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த தவுபிக் அஸ்லாம், அஜ்மிர் காஜா மற்றும் திருப்பூரை சேர்ந்த வேல்முருகன் (26), தீரஜ் ஆகியோர் விஜயகுமாரின் கை, கால்களை கட்டி போட்டு கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரிந்தது.
மேலும் போலீசாரின் கவனத்தை திசை திருப்ப விஜயகுமார் வீட்டில் இருந்த கம்ப்யூட்டர் மானிட்டர், செல்போன், கேமரா, டிவிடி பிளேயர் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர். அவர்களிடம் இருந்து அவற்றை போலீசார் மீட்டனர். தவுபிக் அஸ்லாம், அஜ்மிர் காஜா, வேல்முருகன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
0 comments