ஆத்தூரில் ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை
ஆத்தூர், 03-10-2013 :
சேலம் மாவட்டம் ஆத்தூர் தாயுமானவர் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். இவருக்கு செந்தில், ராமு, சஞ்சீவ்குமார் (26) ஆகிய 3 மகன்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது. சஞ்சீவ்குமார் அந்த பகுதியில் உள்ள ஒரு சேகோ பேக்டரியில் மேலாளராக வேலைப்பார்த்து வந்தார்.
இன்று காலை 8.30 மணியளவில் ஒரு சரக்கு ரெயில் சேலம் நோக்கி சென்றது. ஆத்தூர் ரெயில்வே கேட்டை தாண்டி ராசிபுரம் பிரிவு ரோடு பகுதியில் உள்ள ரெயில்வே கேட் அருகே சரக்கு ரெயில் சென்று கொண்டு இருந்தது.
அப்போது சஞ்சீவ்குமார் தண்டவாளத்தின் ஓரத்தில் செல்போனில் அழுது கொண்டே பேசிக்கொண்டு இருந்தார். ரெயில் வருவதை பார்த்த அவர் தண்டவாளத்தின் மேல் ஏறினார். இதைப்பார்த்த ரெயில்வே கேட் கீப்பர் மற்றும் பொதுமக்கள் சத்தம் போட்டு ரெயில் வருகிறது வா, என்றனர்.
ஆனாலும் இதை கண்டு கொள்ளாத சஞ்சீவ்குமார் செல்போனில் பேசியபடியே அழுது கொண்டே ரெயில் முன்பு பாய்ந்தார். இதில் ரெயில் மோதிய வேகத்தில் உடல் வேறு, கால்வேறாக துண்டானது. துண்டிக்கப்பட்ட சஞ்சீவ்குமார் சிறிது நேரத்தில் துடிதுடித்து இறந்தார்.
இதை நேரில் பார்த்து கொண்டு இருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அனைவரும் பதைபதைத்து நின்றனர்.
இதையடுத்து ரெயில்வே போலீசுக்கும், சஞ்சீவ்குமாரின் உறவினர்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து சஞ்சீவ்குமாரின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
மேலும் அவர் தற்கொலை செய்யும் முன்பு செல்போனில் பேசி கொண்டு அழுதுள்ளார். எனவே அப்போது அவரிடம் பேசியது யார்? ஏதோ பிரச்சினை காரணமாக அவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து இருக்கலாம் என்று தெரியவருகிறது.
தற்கொலை செய்த சஞ்சீவ்குமாருக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு தான் ஜெயந்தி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. அவர் தனது கணவரின் உடலை பார்த்து கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.
0 comments