இராமநாதபுரத்தில் குடிபோதையில் ரகளை செய்த 2 வாலிபர்கள் கைது
இராமநாதபுரம்:
இராமநாதபுரம் டவுன் போலீஸ் நிலையத்தில் தலைமை ஏட்டாக பணியாற்றி வருபவர் நாகய்யா (வயது 42). இவர் நேற்று இரவு ரெயில் நிலைய பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தார்.
அப்போது 2 வாலிபர்கள் குடிபோதையில் ரகளை செய்து அந்த பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு செய்து கொண்டு இருந்தனர். உடனே போலீஸ் ஏட்டு நாகய்யா அவர்களை தட்டி கேட்டார். ஆனால் அவர்கள் மீண்டும் ரகளை செய்து போலீஸ் ஏட்டுவிடம் தகராறு செய்தனர்.
இது குறித்து நாகய்யா இராமநாதபுரம் டவுன் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சவுந்திர பாண்டியன் வழக்குப் பதிவு செய்து குடிபோதையில் ரகளை செய்த இராமநாதபுரத்தை சேர்ந்த சுரேஷ் (27), முத்து முருகன் (28) ஆகியோரை கைது செய்தார்.
0 comments