திருவள்ளூர் அருகே 19 வயது கல்லூரி மாணவி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை
திருவள்ளூர், அக்.4:
சென்னை வில்லிவாக்கம் ஜி.கே.என்.காலனி ஜீவானந்தம் தெருவை சேர்ந்தவர் காதர்ஷெரீப். இவருடைய மகள் அகிபாபானு(வயது 19). இவர், திருவள்ளூரை அடுத்த திருநின்றவூரில் உள்ள சக்தி என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர், தினமும் கல்லூரிக்கு மின்சார ரெயிலில் வந்து செல்வது வழக்கம்.
நேற்று காலை வழக்கம் போல அகிபாபானு, புறநகர் மின்சார ரெயிலில் ஏறினார். ஆனால் அவர், கல்லூரிக்கு செல்ல திருநின்றவூரில் இறங்காமல் அதே ரெயிலில் செவ்வாப்பேட்டை ரெயில் நிலையம் வந்து இறங்கினார்.
பின்னர் புட்லூர் நோக்கி ரெயில் தண்டவாளத்திலேயே சில அடி தூரம் நடந்து சென்றார். அப்போது அந்த தண்டவாளத்தில் ஜோலார்பேட்டை எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டிருந்தது. ஆனாலும் அகிபாபானு தண்டவாளத்தை விட்டு விலகாமல் ரெயிலை நோக்கி ஓடினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ரெயில் பயணிகள், அந்த மாணவியை தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கிச் செல்லும்படி கத்தி கூச்சலிட்டனர். ஆனாலும் அதை கண்டுகொள்ளாமல் அவர் மேலும் முன்னேறிச் சென்று எக்ஸ்பிரஸ் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி திருவள்ளூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தற்கொலை செய்த கல்லூரி மாணவி அகிபா பானுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுபற்றி காதர்ஷெரீப் கொடுத்த புகாரின் பேரில் திருவள்ளூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து அகிபாபானு தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
0 comments