26 October 2013

அவசர அழைப்பு 100க்கு போன் செய்து ஒன்றரை ஆண்டாக 1000 முறை பெண் போலீசிடம் ஆபாச பேச்சு

அவசர அழைப்பு 100க்கு போன் செய்து
ஒன்றரை ஆண்டாக 1000 முறை பெண் போலீசிடம் ஆபாச பேச்சு
 


சென்னை: 

                  கடந்த சில தினங்களாக போலீஸ் கட்டுப்பாட்டு அறை எண் 100க்கு அதிக அளவில் வெடிகுண்டு மிரட்டல் போன்கள் வந்து கொண்டே இருந்தன. எழும்பூர் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த யுவராஜ் என்ற வாலிபர் சில தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்டார்.இந்த பரபரப்பு அடங்கும் முன், போலீஸ் கட்டுப் பாட்டு அறையில் பணிபுரியும் பெண் போலீசா ருக்கே பாலியல் தொல்லை கொடுத்ததாக மாமல்லபுரம் அருகே உள்ள வடநெம்மேலியை சேர்ந்த பன்னீர் செல்வம் என்ற வாலி பர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுபற்றிய விவரம் வருமாறு:சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு கடந்த சில மாதங்களாகவே செல்போனில் பேசி, லாரி கிளீனரான பன் னீர் செல்வம் பெண் போலீசாரிடம் ஆபாசமான வார்த்தை களை பேசியுள்ளார்.

ஒவ்வொரு முறையும் போன் செய்யும் போதெல்லாம், பெண்களின் அங்க அடையாளங்களை அருவருக்கத்தக்க வகையில் சொல்லியுள்ளார்.நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு வழக்கம்போல கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த பன்னீர் செல்வம், பெண் போலீசிடம் ஆபாசமாக பேசி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் இதுபற்றி கட்டுப்பாட்டு அறை இன்ஸ்பெக்டர் முருகன் மூலம் எழும்பூர் போலீசில் புகார் செய்தனர். எழும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரித்தார்.விசாரணையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பன்னீர்செல்வம் 1000 முறை கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து ஆபாசமாக பேசி பெண் போலீசாரை திணறடித்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைதொடர்ந்து, பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் அவர் கைது செய்யப்பட்டார். அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தொந்தரவு செய்தல், மிரட்டல் விடுத்தல், தகவல் தொடர்பு சாதனத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளிலும் அவர் மீது வழக்கு பாய்ந்தது.

இனிமையான வார்த்தை செலவு இல்லாத பேச்சு

கைது செய்யப்பட்ட பன்னீர் செல்வம் போலீசாரிடம் அளித்த வாக்குமூலம்:எனக்கு ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர். ஒன்றரை ஆண்டுக்கு முன்பு, நண்பர்களுடன் மது குடித்து போனில் பேசியபோது, தவறி 100க்கு சென்று விட்டது. மறுமுனையில் பேசிய பெண் போலீசின் குரல் மிகவும் இனிமையாக இருந்தது. ஏற்கனவே, எனக்கு போலீஸ் என்றால் பிடிக்காது. இதனால், இனிமையாக பேசிய பெண் போலீசிடம் ஆபாசமாக பேசினேன். 100க்கு அழைத்ததால் எனக்கு காசு செலவு ஏதும் இல்லை. இது எனக்கு வசதியாக போய் விட்டது.இதனால், குடிக்கும்போதெல்லாம் போன் செய்வேன். ஆனால், போலீசார் இதை கண்டு கொள்ளவில்லை. நான் போலீசை பழி வாங்குவதாக நினைத்து தொடர்ந்து போன் செய்து கொண்டேஇருந்தேன்.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top