4 October 2013

தனுஷ்கோடியில் இருந்து இலங்கைக்கு படகில் 10 கிலோ கஞ்சா கடத்த முயற்சி: 4 பேர் கைது

தனுஷ்கோடியில் இருந்து இலங்கைக்கு படகில் 10 கிலோ கஞ்சா கடத்த முயற்சி: 4 பேர் கைது


இராமேசுவரம், அக். 4:

தனுஷ்கோடி அரிச்ச முனையில் இருந்து படகில் இலங்கைக்கு  கஞ்சா கடத்தப்பட உள்ளதாக இராமேசுவரம் சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சுங்க இலாகா சூப்பிரண்டு அஜித்குமார், புகழேந்தி மற்றும் அதிகாரிகள் தனுஷ்கோடி அரிச்ச முனை கடற்கரை பகுதிக்கு சென்றனர்.

அப்போது நாட்டு படகில் மண்டபம் அகதிகள் முகாமை சேர்ந்த 2 அகதிகள் உள்பட 4 பேர் 10 கிலோ கஞ்சாவை இலங்கைக்கு கடத்த முயன்றனர். உடனே அதிகாரிகள் கஞ்சா கடத்த முயன்ற 4 பேரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

இலங்கைக்கு கடத்தப்பட இருந்த 10 கிலோ கஞ்சா மற்றும் நாட்டு படகு, ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட 4 பேரிடமும் சுங்க இலாகா அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top