குரூப்1 மெயின் தேர்வு
சென்னை:
போலீஸ் டிஎஸ்பி, டெபுடி கலெக்டர் உள்ளிட்ட பணிகளுக்கான குரூப்1 மெயின் தேர்வு, சென்னையில் இன்று 14 மையங்களில் நடைபெற்றது. தமிழக அரசில் டெபுடி கலெக்டர், டிஎஸ்பி உள்ளிட்ட பணிகளுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் குரூப்1 தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. டெபுடி கலெக்டர் காலியிடம் 8, டிஎஸ்பி4, வணிகவரி உதவி ஆணையர்7, மாவட்ட பதிவாளர்1, மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி5 ஆகிய பதவிகளில் 25 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்1 முதல்நிலை எழுத்து தேர்வு, கடந்த 16213ல் நடந்தது. இத்தேர்வை தமிழகம் முழுவதும் 75,627 பேர் எழுதினர். இதில் 1372 பேர் மெயின் தேர்வுக்கு அழைக்கப்பட்டனர். அதன்படி மெயின் தேர்வு இன்று காலை சென்னையில் தொடங்கி நடைபெற்றது.
சென்னையில் எழும்பூர் மாநில பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருவல்லிக்கேணி என்.கே.டி. மேல்நிலைப்பள்ளி, சைதாப்பேட்டை ஜெயகோபால் கரோடியா மேல்நிலைப்பள்ளி, வேப்பேரி பென்டிக் மேல்நிலைப்பள்ளி, மயிலாப்பூர் சிறுவர் தோட்ட மேல்நிலைப்பள்ளி, அடையாறு அவ்வை இல்லம் மேல்நிலைப்பள்ளி உள்பட 14 மையங்களில் இத்தேர்வு நடைபெற்றது. இத்தேர்வை சுமார் 1,372 பேர் எழுதினர். காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வு பிற்பகல் 1 மணி வரை நடந்தது. தேர்வு மையங்களில் தேர்வு முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. தேர்வில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் துணை செயலாளர்கள், சார்பு செயலாளர்கள் தலைமையில் தனித்தனியே பறக்கும் படைகள் அமைக்கப்பட்டிருந்தது.
மெயின் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு அடுத்த கட்டமாக நேர்முக தேர்வு நடத்தப்படும். பின்னர் மெயின் தேர்வு மற்றும் நேர்முக தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மெரிட் பட்டியல் தயாரிக்கப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். திருவல்லிக்கேணி என்கேடி மேல்நிலைப் பள்ளியில் நடந்த தேர்வை டிஎன்பிஎஸ்சி தலைவர் நவநீத கிருஷ்ணன், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சோபனா ஆகியோர் பார்வையிட்டனர். பின்னர் நவநீத கிருஷ்ணன் கூறுகையில், ‘இந்த தேர்வில் எந்த முறைகேடும் நடக்காமல் இருக்க தேர்வு முழுவதும் வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டன. தேர்வு முடிவு விரைவில் வெளியிடப்படும்’ என்றார்.
சென்னையில் எழும்பூர் மாநில பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருவல்லிக்கேணி என்.கே.டி. மேல்நிலைப்பள்ளி, சைதாப்பேட்டை ஜெயகோபால் கரோடியா மேல்நிலைப்பள்ளி, வேப்பேரி பென்டிக் மேல்நிலைப்பள்ளி, மயிலாப்பூர் சிறுவர் தோட்ட மேல்நிலைப்பள்ளி, அடையாறு அவ்வை இல்லம் மேல்நிலைப்பள்ளி உள்பட 14 மையங்களில் இத்தேர்வு நடைபெற்றது. இத்தேர்வை சுமார் 1,372 பேர் எழுதினர். காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வு பிற்பகல் 1 மணி வரை நடந்தது. தேர்வு மையங்களில் தேர்வு முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. தேர்வில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் துணை செயலாளர்கள், சார்பு செயலாளர்கள் தலைமையில் தனித்தனியே பறக்கும் படைகள் அமைக்கப்பட்டிருந்தது.
மெயின் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு அடுத்த கட்டமாக நேர்முக தேர்வு நடத்தப்படும். பின்னர் மெயின் தேர்வு மற்றும் நேர்முக தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மெரிட் பட்டியல் தயாரிக்கப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். திருவல்லிக்கேணி என்கேடி மேல்நிலைப் பள்ளியில் நடந்த தேர்வை டிஎன்பிஎஸ்சி தலைவர் நவநீத கிருஷ்ணன், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சோபனா ஆகியோர் பார்வையிட்டனர். பின்னர் நவநீத கிருஷ்ணன் கூறுகையில், ‘இந்த தேர்வில் எந்த முறைகேடும் நடக்காமல் இருக்க தேர்வு முழுவதும் வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டன. தேர்வு முடிவு விரைவில் வெளியிடப்படும்’ என்றார்.
0 comments