எனது மகனுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டாம்: ஊடகங்களுக்கு தெண்டுல்கர் வேண்டுகோள்
மும்பை, செப்.9:–
கிரிக்கெட்டின் சகாப்தம் என்று அழைக்கப்படுபவர் தெண்டுல்கர். இவரது மகன் அர்ஜூன். அர்ஜூன் தெண்டுல்கர் கடந்த ஆண்டு 14 வயதுக்குட் பட்ட போட்டியில் சதம் அடித்தார். இந்த ஆண்டு அவர் இதுவரை முத்திரை பதிக்கும் வகையில் ஆட வில்லை.
இந்த நிலையில் எனது மகனுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டாம் என்று ஊடகங்களுக்கு தெண்டுல்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 100–வது சதம் அடித்த அவருக்கு மும்பை விளையாட்டு பத்திரிகையாளர் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடந்தது. இதில் தெண்டுல்கர் இது தொடர்பாக கூறியதாவது:–
எனது மகன் கிரிக்கெட்டை நேசித்து விளையாடுகிறான். என்னைபோல் அவரை ஒப்பிட்டு விடக்கூடாது. எல்லா குழந்தைகளையும் போல அவனையும் இயல்பாக வாழ விடுங்கள்.
பொறுப்புள்ள தந்தை என்ற முறையில் எனது மகனுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டாம் என்று ஊடகங்களை கேட்டுக் கொள்கிறேன். அவனை இயல்பாக விளையாட விடுங்கள்.
இவ்வாறு தெண்டுல்கர் கூறியுள்ளார்.
0 comments