ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் மீண்டும் அட்லி இயக்கும் புதிய படம்
இயக்குனர் ஷங்கரின் உதவியாளர் அட்லி இயக்கிய ராஜா ராணி படம் கடந்த செப்.27-ந் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா, சத்யன், சந்தானம், சத்யராஜ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார்.
இந்த படம் வெளியான சில நாட்களிலேயே படம் குறித்து நல்ல கருத்துக்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. இது படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
திரையுலகைச் சேர்ந்த பல பிரபலங்களும் படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் அட்லிக்கு பாராட்டுக்கள் தெரிவித்த வண்ணம் உள்ளனர். இப்படத்தை தி நெக்ஸ்ட் பிக் பிலிம் நிறுவனத்துடன் இணைந்து ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்து இருந்தார். இந்நிலையில், இந்நிறுவனத்துடன் இணைந்து அட்லி மீண்டும் ஒரு படத்தை இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
மேலும், இப்படத்திற்கும் ஜீ.வி.பிரகாஷே இசையமைக்கிறார். ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவை கவனிக்க இருக்கிறாராம். நடிகர், நடிகைகள் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை. இந்த புதிய படத்தில் சத்யராஜ் இடம்பெறுவார் என தெரிகிறது. ஏனென்றால், சமீபத்திய பேட்டி ஒன்றில் அட்லி கூறும்போது, எனக்கு மிகவும் பிடித்த நடிகர் சத்யராஜ். இனி நான் எடுக்கும் படங்களில் அவருக்கு வாய்ப்பு கொடுப்பேன் என்று கூறியிருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
திரையுலகைச் சேர்ந்த பல பிரபலங்களும் படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் அட்லிக்கு பாராட்டுக்கள் தெரிவித்த வண்ணம் உள்ளனர். இப்படத்தை தி நெக்ஸ்ட் பிக் பிலிம் நிறுவனத்துடன் இணைந்து ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்து இருந்தார். இந்நிலையில், இந்நிறுவனத்துடன் இணைந்து அட்லி மீண்டும் ஒரு படத்தை இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
மேலும், இப்படத்திற்கும் ஜீ.வி.பிரகாஷே இசையமைக்கிறார். ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவை கவனிக்க இருக்கிறாராம். நடிகர், நடிகைகள் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை. இந்த புதிய படத்தில் சத்யராஜ் இடம்பெறுவார் என தெரிகிறது. ஏனென்றால், சமீபத்திய பேட்டி ஒன்றில் அட்லி கூறும்போது, எனக்கு மிகவும் பிடித்த நடிகர் சத்யராஜ். இனி நான் எடுக்கும் படங்களில் அவருக்கு வாய்ப்பு கொடுப்பேன் என்று கூறியிருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
0 comments