ஜெ. சொத்து குவிப்பு வழக்கு
அரசு வழக்கறிஞர் நீக்கப்பட்டது செல்லாது
என உச்சநீதிமன்றம் தீர்ப்பு
புதுடெல்லி:
ஜெயலலிதாவிற்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு வழக்கறிஞர் பவானி சிங் நீக்கப்பட்டது செல்லாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. நீதிபதி பாலகிருஷ்ணாவிற்கு பணி நீடிப்பு வழங்குவது தொடர்பாக கர்நாடக அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஜெயலலிதாவிற்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில், அரசு வழக்கறிஞராக பவானி சிங் நீக்கம் செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
கடந்த வாரம் இந்த வழக்கின் இறுதி விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து நீதிபதிகள் இன்று தீர்ப்பு அளித்தனர். சொத்து குவிப்பு வழக்கில், அரசு வழக்கறிஞர் பவானி சிங்கை நீக்கிய கர்நாடக அரசின் உத்தரவை ரத்து செய்வதாக நீதிபதிகள் அறிவித்தனர். பாலகிருஷ்ணாவிற்கு பணி நீடிப்பு வழங்குவது தொடர்பாக கர்நாடக அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சிறப்பு நீதிமன்ற வழக்கின் விசாரணை முடியும் தருவையில் இருப்பதால் நீதிபதிக்கு பணி நீட்டிப்பு வழங்குவது தொடர்பாக, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பரிசீலனை செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்கது தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரம் இந்த வழக்கின் இறுதி விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து நீதிபதிகள் இன்று தீர்ப்பு அளித்தனர். சொத்து குவிப்பு வழக்கில், அரசு வழக்கறிஞர் பவானி சிங்கை நீக்கிய கர்நாடக அரசின் உத்தரவை ரத்து செய்வதாக நீதிபதிகள் அறிவித்தனர். பாலகிருஷ்ணாவிற்கு பணி நீடிப்பு வழங்குவது தொடர்பாக கர்நாடக அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சிறப்பு நீதிமன்ற வழக்கின் விசாரணை முடியும் தருவையில் இருப்பதால் நீதிபதிக்கு பணி நீட்டிப்பு வழங்குவது தொடர்பாக, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பரிசீலனை செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்கது தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.
0 comments