30 September 2013

ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு ஊர்வலம்: பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்

ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு ஊர்வலம்
பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்


இராமநாதபுரம், செப். 30:

                இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் ஆண்டுதோறும் சந்தனக்கூடு திருவிழா, விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டும், ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு திருவிழா விமரிசையாக தொடங்கியது. இந்த விழாவில் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும், கேரள மாநிலத்தில் இருந்தும் ஏராளமானோர் வந்து கலந்து கொண்டனர்.

விழாவின் சிறப்பு நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம், நேற்று இரவு தொடங்கி, இன்று அதிகாலை வரை நடைபெற்றது. தாரை, தப்பட்டை முழங்க குதிரைகள் அணிவகுப்புடன், சந்தனக்கூடு, மின்னொளி அலங்காரத்துடன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

இந்த ஊர்வலத்தில் அனைத்து மதத்தையும் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் தலைமையில், கீழக்கரை துணை சூப்பிரண்டு சோமசேகர் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

மக்களின் வசதிக்காக சிறப்பு பஸ் வசதிகளும், சுகாதார நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு இருந்தன. சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top