ஏர்வாடி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்:
வாலிபர் பலி
இராமநாதபுரம், ஜூன் 4:
இராமநாதபுரம் அருகே உள்ள சிக்கலை அடுத்த கோட்டைனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் ஆனந்தன் (வயது 25). இவர் கோவையில் ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். ஊருக்கு வந்திருந்த அவர் பாலிடெக்னிக் மாணவர் ராஜ்குமார் (18) மற்றும் ரமேஷ்குமார் (22) ஆகியோருடன் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றார்.
ஏர்வாடி காலனி கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் அவர்கள் சென்றபோது தூத்துக்குடியில் இருந்து அரியலூர் சென்ற லாரி மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இவர்களில் ஆனந்தன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியானார். படுகாயம் அடைந்த ரமேஷ்குமார், ராஜ்குமார் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து ஏர்வாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துச்செல்வம், சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, ஏட்டு ஆனந்த் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இராமநாதபுரம் அருகே உள்ள சிக்கலை அடுத்த கோட்டைனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் ஆனந்தன் (வயது 25). இவர் கோவையில் ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். ஊருக்கு வந்திருந்த அவர் பாலிடெக்னிக் மாணவர் ராஜ்குமார் (18) மற்றும் ரமேஷ்குமார் (22) ஆகியோருடன் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றார்.
ஏர்வாடி காலனி கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் அவர்கள் சென்றபோது தூத்துக்குடியில் இருந்து அரியலூர் சென்ற லாரி மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இவர்களில் ஆனந்தன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியானார். படுகாயம் அடைந்த ரமேஷ்குமார், ராஜ்குமார் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து ஏர்வாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துச்செல்வம், சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, ஏட்டு ஆனந்த் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
0 comments