8 August 2013

லஷ்கர்-இ-தொய்பா பயங்கர சதித் திட்டம்:இந்திய ராணுவம் விழிப்புடன் இருக்க எச்சரிக்கை

 லஷ்கர்-இ-தொய்பா பயங்கர சதித் திட்டம்
 இந்திய ராணுவம் விழிப்புடன் இருக்க எச்சரிக்கை

 



புதுடெல்லி:
 

               இந்தியாவின் அமைதியை சீர்குலைக்க லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு பயங்கர சதித் திட்டம் தீட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்மைக் காலமாக இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. உச்சகட்டமாக கடந்த திங்கள் இரவு 5 வீரர்களை சுட்டுக் கொல்லப்பட்டது நாட்டு மக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த கொடூரத்திற்கு பாகிஸ்தான் ராணுவமும், லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பும் தான் காரணம் என்று தெரியவந்துள்ளது.

கடந்த மாதம் காஷ்மீர் எல்லைப் பகுதிக்கு லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தின் தலைவன் ஹபீஸ் சையத் வந்ததாகவும், அங்கு தீவிரவாதிகளுக்கு அவன் பயிற்சி கொடுத்ததாகவும் அமெரிக்க உளவு அமைப்பு தெரிவித்துள்ளது. காஷ்மீர் பகுதிக்குள் 700க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக உளவுத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

காஷ்மீர் எல்லையில் சமீபகாலமாக இந்திய படைகளுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்ததற்கு பாகிஸ்தானின் தூண்டுதலே காரணம் என்று உளவு அதிகாரிகள் கூறியுள்ளனர். ஊடுருவலை அதிகப்படுத்துவதற்காகவே வீரர்கள் மீது தாக்குதல் நடத்தி இந்திய படைகளின் கவனத்தை திசை திருப்ப பாகிஸ்தான் சதி செய்வதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகம் அருகே தற்கொலை படைத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதும் சதியின் ஒரு வடிவமே என்று கூறியுள்ள உளவுத்துறையினர், விழிப்புடன் இருக்கமாறு இந்திய ராணுவம் அறிவுறுத்தப்பட்டதாக கூறினர்.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top