பிறை தெரிந்தது : நாளை ரம்ஜான்
பிறை காணப்பட்டதை அடுத்து நாளை இஸ்லாமியர்களின் புனித ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தலைமை ஹாஜி முஸ்தி ஹாஜி சலாவூதின் முகம்மது ஆயூப் பிறை காணப்பட்டதை அடுத்து இவ்வாறு அறிவித்துள்ளார்.
ரம்ஜானுக்கு முந்தைய நாள் வானில் பிறை தோன்றும், அப்படி பிறை தோன்றிய அடுத்தநாள் ரம்ஜான் பண்டிகை கடைபிடிப்பது இஸ்லாமியர்களின் வழக்கம் ஆகும்.
இஸ்லாமியர்களின் புனித ரம்ஜான் பண்டிகை நாளை கொண்டடாப்படுவதை அடுத்து தமிழகத்தின் முக்கிய தலைவர்கள் இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
0 comments